சர்க்காரியா கமிஷன் முன்பு எம்ஜிஆர் சொன்ன அதே வார்த்தையை இன்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு பன்னீர் செல்வம் சொல்கிறார்”எனக்கு எதுவும் தெரியாது”..
சேலம் கண்ணன் சொன்னதை வைத்து குற்றம்சாட்டியதாக (எம்.ஜி.ஆர்) மகோரா சொன்னாரே அதைப்போல முன்பு முதல்வராக இருந்தவர், விசாரணை கமிஷன் முன்பு தெரியாதென சொல்லி தப்பிக்க பார்க்கிறார்.
இவர் தான் விஜயபாஸ்கர் 7 ஆள்களை நிறுத்தி வந்துபோவரை கணக்கெடுக்கிறார் என்றவர் நாளை நீதிவிசாரணை வந்தால் உள்ளே போகபோவது விஜய் பாஸ்கரன் என பொதுக்கூட்டங்களில் பேசியவர்.
ஜெயலலிதாவிற்கு என்ன நோய் என்று கூட தெரியாதாம் என்ன மாதிரி சிகிச்சை அளிக்கபட்டதும்தெரியாது.அவரை மருத்துமனையில் பார்க்கவே இல்லை என்ன நடந்ததென தெரியாது ..
காவிரிக் கூட்டம் பற்றி தெரியாதாம் இவர் அமைச்சர் .இவர் அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவர் பொருளாளராக இருந்தவர் முன்னாள் முதல்வர் .
இவர் வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்ள பொய் சொல்வது தெரிகிறது.9 மாதமாக விசாரணைக்கு ஆஜராகாத உத்தமர் பிடி இறுகுவதால் வந்தார் மேலும் பிடி இறுகும் என அறியாமல் உண்மையை மறைக்கிறார்.
யாரை காப்பாற்ற என்ற கேள்வி எழுகிறது .. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடந்த சமூக நீதிக்கெதிரான நடவடிக்கைகள், ஜெயலலிதா இருந்தவரை அமல் படுத்த முடியாமல் போன திட்டங்கள் விரைந்து விவாதமின்றி யாரும் அறியாமல் கையெழுத்தானதே.
ஏன் ? நீட் உட்பட ஒன்றிய அரசின் திட்டங்களும் CAA போன்ற சட்டங்களும் அதிமுக துணையோடு அரங்கேறியதே இதற்கெல்லாம் தடையாக இருந்த ஜெயலலிதா மரணம் மர்மம் நிறைந்ததை வெளிகொணர வேண்டாமா சசிகலாவை தவிர யாருக்கும் எதுவும் தெரியாதென்றால் ஐயம் வருகிறதே..
ஜெயலலிதா மீதான நமது பார்வை கருத்து அரசியல் எதிர்மறையானது ..அரசியலில் ஜெயலலிதா உண்மையான “தீயசக்தி ” என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் அவரது மரணம் மர்மங்கள் நிறைந்ததாக இருப்பது கவலை தருகிறது .
விரைந்து விசாரணை கமிஷன் அறிக்கையை பெற்று வழக்கு தொடரவேண்டும் அதை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி கூட்டுக் களவாணிகளை தண்டிக்க வேண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கே சவப்பெட்டி தயார் செய்தவர்கள் மிக மிக ஆபத்தானவர்கள்.
ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை துரோகி மட்டுமல்ல பரம அயோக்கியர் விசதாரி தர்மயுத்தம் பெயரில் நாடகமாடிய நயவஞ்சகர் சட்டத்தின் முன் நிறுத்தபட வேண்டியவர்களில் முதன்மையானவர்..
ஆலஞ்சியார்