chennireporters.com

எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை.

      எடப்பாடிக்கு பெரிய சிக்கல்? நெடுஞ்சாலை முறைகேடு தொடர்பான வழக்கு..                 சுப்ரீம் கோர்டில் நாளை விசாரணை.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.

டெண்டர்களை தனது உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியதில் சுமார் ₹4000 கோடி ஊழல் என வழக்கு தொடரப்பட்டது.

செய்யத்துரை

4 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணை நாளை பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி

இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட, விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.  இப்பொழுது மறு விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி சட்டத்திற்கு புறம்பாகவும் அவரது உறவினர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பணிகளை ஒதுக்கியதாக திமுகவைச் சேர்ந்த சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் எடப்பாடி தப்பிக்க முடியாது என்கிறார்கள் திமுகவினர்.   ஏற்கனவே கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்குப் போவது உறுதி என்கிறார்கள்.

இதையும் படிங்க.!