chennireporters.com

பல ஆண்களுடன் தொடர்பிலிருந்த இலங்கை பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.

கள்ளக்காதல் விவகாரம் இலங்கை பெண்ணுக்கு அரிவாள் வெட்டு. உண்மையை விசாரிக்குமா போலீஸ்.

 

 

இலங்கையை சேர்ந்தவர் ’ ரோகினி வசந்தி ப்ரியஸ் ‘இவர் 2005 ஆம் ஆண்டு அபுதாபியில் வேலை பார்க்கும் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன .

அதன் பிறகு கணவர் கார்த்திகேயன் தொடர்ந்து அபுதாபியில் வேலை பார்த்து கொண்டு வருகிறார்.  2013 ஆம் ஆண்டு கார்த்திகேயனுக்கும் ரோகிணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கார்த்திகேயன் வீட்டில் இருக்கும்போதே சில ஆண்கள் நேரடியாக ரோகிணி வீட்டிற்கு வந்து ரோகினி இடம் சிரித்து பேசி பழகியதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கார்த்திகேயன் ரோகினிடம்  யார் அவர்கள் என்று கேட்டபோது ரோகிணி  கணவருக்கு முறையான பதில் அளிக்காமல் நீ எனக்கு தேவையில்லை என்று அவரை ஒதுக்கி வைத்து  தனியாக சென்று விட்டார் . அதிலிருந்து ஆயில் மில் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கமலக்கண்ணன் என்பவர் உடன் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது .

 

கமலக்கண்ணன்

அதன் பிறகு புடவை வியாபாரம் ரியல் எஸ்டேட் என சில தொழில்களில் செய்த ரோகினி குழந்தைகளை அடிக்கடி அந்த பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர் வீட்டில் விட்டு செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஐந்து வயது உள்ள ஒரு குழந்தையை ரோகிணி வளர்த்து வருவதாகவும்  அந்த குழந்தைக்கு தந்தை யார் என்று தெரியவில்லை.

அந்த மர்ம நபருடன் ரோகிணி திருமணம் செய்து கொண்டாரா? அல்லது அவருடன் தனியாக வசித்து வருகிறாரா ? என்று தெரியவில்லை . அது தவிற  முறையான பாஸ்போட் இல்லாமல்  அதாவது பாஸ்போட் காலாவதியாகி பல வருடங்களாகிறது. அரசின் விதிமுறைகளுக்கு மாறாக பல ஆண்டுகளாக  தங்கி வருகிறார்.  இது தொடர்பாக கார்த்திகேயன் பலமுறை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு பல புகார் கடிதங்கள் எழுதியுள்ளார் .அந்த புகார் கடிதங்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் ராஜாஜிபுரத்தில் துணிக்கடை நடத்தி வரும் ரோகினி மீது நேற்று அவரது கடைக்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் தகராறு செய்து அவர் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் பிரிந்து  சென்ற   கமலக்கண்ணனா அல்லது ரோகிணி தான் பழகிய இன்னும் சில இளைஞர்களா அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் தான் ரோகிணியை வெட்டினார்களா என்று தெரியவில்லை.  இது தொடர்பாக திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் உறவினர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆனால் உண்மை என்ன ரோகினி வசந்தி ப்ரியஸ் இடம் தொடர்பில் உள்ள வாலிபர்கள் எத்தனை பேர் ?  அவர் வைத்திருக்கும் 7708496271, 9952986271 என்ற செல்போன்களை ஆய்வு செய்தால் இதுவரை ரோகிணி எத்தனை ஆண்களிடம் பேசி இருக்கிறார் என்ன பேசி இருக்கிறார். அவருடன் நெருக்கமாக தொடர்பில் இருக்கும் இளைஞர்கள் யார், யார் என்பது தெரியவரும் என்கின்றனர் கார்த்திகேயன் தரப்பினர்.

போலீசார் உண்மையை விசாரிக்க தயக்கம் காட்டாமல் தீர விசாரித்து கள்ள பாஸ்போர்ட்டில் பல வருடங்களாக அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாய் வசித்து வரும் ரோகிணி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றார் அவரது முன்னாள் கணவர் கார்த்திகேயன்.

தன் குழந்தைகளின் வாழ்க்கை எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். தன் குழந்தைகளை அவருடன் வைத்திருந்தால் குழந்தைகளும் கெட்டுப் பாழாய் போய்விடுவார்கள் குழந்தைகளை மீட்டு என் தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார் கார்த்திகேயன்.

இதையும் படிங்க.!