chennireporters.com

பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதி ஏற்படுத்தி தர லஞ்சம் கேட்ட அதிகாரி பணியிடை நீக்கம்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் பப்ஜி மதன் சொகுசாக இருக்க வேண்டுமென்றால் தனக்கு மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென்று புழல் சிறைத்துறை அதிகாரி செல்வம் என்பவர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியானது.இது தொடர்பாக சிறைத்துறை ஐஜி செல்வத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏற்கனவே பற்றி மதன் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அப்போது அங்கு அவர் சொகுசாக இருப்பதற்கு கிருத்திகா சிறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!