chennireporters.com

#raid at poontamalli municipal office; பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக மனு கொடுத்தவர்களிடமும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சமாக பரிசு பொருட்களை பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் சங்கர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தமிழரசி தலைமையில் நேற்று மாலை பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடியாக நுழைந்து அலுவலகத்தின் நுழைவாயிலை பூட்டிவிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் லதா.

இந்த சோதனையின் போது நகராட்சி ஆணையர் லதா, நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் மற்றும் நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். நகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் தீவிர சோதனை நடைபெற்றது. மேலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏராளமான பரிசுப்பொருட்கள் மற்றும் பணத்தை லஞ்சமாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெற்றுள்ளதாக வந்த தகவலையடுத்து ஒவ்வொருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

வருவாய் ஆய்வாளர் ரவி.

பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஊழியர்களின் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது நகராட்சி அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.

பூந்தமல்லி நகராட்சி கமிஷ்னர் லதா மற்றும் சேர்மன் காஞ்சனா. 

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது நகராட்சியில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் சரத் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

வருவாய் ஆய்வாளர் மற்றும் கணக்கர் பழனி.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இரவு பத்தரை மணி அளவில் வேகமாக ஆம்புலன்ஸ் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்றது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் வலிப்பு வந்தவர் வந்தவருக்கு உடல்நிலை சரியானதால் ஆம்புலன்சில் வந்த மருத்துவ பணியாளர்கள் அவர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் கொடுத்துவிட்டு திரும்பி சென்றனர்.

பூந்தமல்லி நகராட்சி மேனேஜர் மேகலா.

இதற்கிடையே இன்று அதிகாலை 3 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது நகரமைப்பு பிரிவில் கணக்கில் வராத ரூ.1.66 லட்சம், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.34,700 என மொத்தம் 2 லட்சத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ராஜ்குமார், குமாரவேல் மற்றும் ஊழியர் சரத் பாபு ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


அரசு சார்பில் நகரமைப்பு பிரிவு பணிகள் இணைய வழியாக மாற்றிய பிறகும் நேற்று நடந்த சோதனையில் பூந்தமல்லி நகராட்சியில் நகரமைப்பு பிரிவிலிருந்து கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டது. முறையாக ஆய்வு செய்யாமல் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கி குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க முக்கிய காரணம் நகரமைப்பு பிரிவுதான் என்று கூறப்படுகிறது.

 

அதிகாலை 3 மணி வரை நடந்த இந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2 லட்சத்து 700 திருவள்ளூர் மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் இந்த சோதனையால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் விடிய விடிய நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அடுத்து காட்டுப்பாக்கம் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் லதா வீடுள்ளது. அந்த வீட்டில் நேற்று காலை 10 மணிக்கு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இரவு வரை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் 2 முக்கிய டாக்குமென்ட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பூந்தமல்லி திமுக சேர்மன் காஞ்சனா.

அது தவிர அந்த அலுவலகத்தில் வருவாய் பிரிவில் 15 ஆண்டுகளாக பணிபுரியும் அரக்கோணத்தை சேர்ந்த ரவி என்பவர் பற்றி புதிய புகார் ஒன்று நேற்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் குப்தா பவுண்டேஷனில் வரி குறைத்து போடப்பட்டதற்கு ஒரு கோடி ரூபாய் வரை ரவியும் கமிஷனர் லதாவும் லஞ்சம் வாங்கியதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அது தவிர ரவிக்கு மட்டும் ஏறக்குறைய 20 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக சொல்லுகிறார்கள் அவருடன் பணியாற்றும் ஊழியர்கள்.

லஞ்ச ஒழித்துறை, கையூட்டு தொடர்பான கோப்புபடம்

ரவி  பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர், சேர்மன், ஆல் இன் ஆல் என்கிறார்கள் திமுக கவுன்சிலர்கள் சிலர். எனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கமிஷனர் லதா மற்றும் 14 ஆண்டுகளாக  ஒரே இடத்தில் அதாவது பூந்த மல்லி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ரவி ஆகியோர் வீட்டில் உள்ளவர்களின் வங்கி கணக்கு சொத்து வீட்டில் உள்ளவர்களின் அனைத்து வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் திமுக கவுன்சிலர்கள் சிலர்.

நகர மன்ற தலைவர் காஞ்ணனாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார்  எந்த ஒரு விசாரணைக்கும் உட்படுத்தாமல் இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் அவர்கள் வீட்டிலும் எந்த ஒரு சோதனை ஈடுபடவில்லை என்று குறிப்பிடத்தக்கது. என்ன காரணத்திற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனை நடத்தவில்லை என்று டி.எஸ்.பி தமிழ்ச்செல்விக்கே வெளிச்சம்.

இதையும் படிங்க.!