chennireporters.com

காமராஜ் வீட்டில் ஊழல் செய்து சேர்த்து வைத்த பல கோடி மதிப்புள்ள பணம், தங்கம் சிக்கியது.

திரு.R.காமராஜ், முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை
தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்டம்
என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 01.04.2015 முதல் 31.03.2021
வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில்
அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து, அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/-  அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.

இந்த விரிவான விசாரணையின் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில்
திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள்
120(B) IPC, 13(2) r/w 13(1) (e), 109 IPC r/w 13(2) r/w 13(1) (e), 13(2) r/w
13(1) (b), 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி


(1) திரு.காமராஜ், முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்
துறை
(2) Dr.M.K.இனியன், 3) Dr.K.இன்பன், 4) திரு.R.சந்திரகாசன் 5) திரு.B.கிருஷ்ணமூர்த்தி
மற்றும் 6) திரு.S.உதயகுமார் ஆகியோர்கள் மீது 07.07.2022ஆம் தேதி வழக்கு
தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் புலன் விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை (6),
கோயம்புத்துார் (1), திருச்சி (3), தஞ்சாவூர் (4) மற்றும் திருவாரூர் (38) மாவட்டங்களில்

மொத்தம் 52 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று
08.07.2022 சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த சோதனையில் பணம் ரூ.41,06,000/-    தங்க நகைகள் 963 சவரன், சுமார் 23,960 கிராம் வெள்ளி,  i-phone,  கணிணி,  பென் டிரைவ், Hard Discs மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம்  ரூ.15,50,000/- வங்கி பெட்டக சாவி, i-phone, கணிணி, பென் டிரைவ், Hard Discs மற்றும்  வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க.!