chennireporters.com

ஆறுமுகசாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை யை தாக்கல் செய்யவேண்டும் என்று ஏன் உத்தரவிடக்கூடாது. ஐகோர்ட் கேள்வி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அதுசம்பந்தமாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது இதுநாள் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி, ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி, தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வானது, ஆறுமுகச்சாமி ஆணையம் .

தனது விசாரணையை மூன்று மாதத்தில் முடித்து, இறுதி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என்பது குறித்து ஆறு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

இதையும் படிங்க.!