chennireporters.com

#thieves Paramashivam; மணல் திருடர்களிடம் மாமுல் வாங்கிய மதுரை மண்ணாங்கட்டி எஸ்.ஐ. பரமசிவம்…

திருவள்ளூர் அருகே எஸ்.8- புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புதிதாக பதவியேற்ற மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் அந்தப் பகுதியில் உள்ள மணல் மாஃபியாக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு மணல் கடத்த உதவி புரிந்தார் என்கிற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‍‌‌ திருவள்ளூர் அருகே உள்ளது பி-8.  புல்லரம்பாக்கம் காவல் நிலையம் இந்த காவல் நிலையத்திற்கு சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் நான் போலீஸ் அல்ல பொறுக்கி என்று சினிமா படத்தில் வரும் வசனத்தையே சொல்லி பொதுமக்களிடத்திலும் மணல் மாஃபியாக்கள் இடமும் பணம் பெற்றுக் கொண்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி வருகிறார்.

இது தொடர்பாக  ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அது குறித்து நாம் விசாரிக்க தொடங்கினோம். நாம் விசாரித்த வகையில் பி 8 புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புன்னப்பாக்கம், பீமனந்தோப்பு, ராம தண்டலம் , ஈக்காடு கண்டிகை புல்லரம்பாக்கம், பூதூர், ஆகிய பகுதிகளில் செம்மண், கிராவல் மண், மணல் கடத்தப்பட்டு வருகிறது.

புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீனா, சுரேந்தர், நரேந்தர், ஜெகன்,  ஆகியோர் ஆளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்துக்கு மாமுலாக கொடுத்துள்ளனர்.  பூண்டி ஏரி பகுதியில் உள்ள சில இடங்களில் மணல் கடத்துவதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும் என்று லஞ்சம் கொடுத்தனர்.

இந்த நிலையில் மாமுல் வாங்கிக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் மணல் கொள்ளையர்களை மணல் திருட அனுமதிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதில் தீனா என்பவர் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்தை தொடர்பு கொண்டு சார் பணம் கொடுத்து எவ்வளவு நாள் ஆகிறது மணல் எடுக்க அனுமதிக்க வில்லை நாளைக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டுள்ளார்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் இன்றைக்கு வேண்டாம் நாளை சொல்லுகிறேன் என்று சொல்லி காலம் கடத்தி வந்துள்ளார் .இதேபோல பல நாள் காலம் கழித்து வந்துள்ளார். ஒரு நாள்   தீனா சார் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள். எனது பார்ட்டி நிறைய பேர் மணல் கேட்டு என்னை தொந்தரவு செய்கிறார்கள்.  வீடு கட்டும் வேலையை அவர்கள் தொடங்கி விட்டார்கள். மணல் இல்லாததனால் வீட்டு வேலை தடைபட்டு நிற்கிறது என்று சொல்லியுள்ளார்.

இதில் கோபமடைந்த சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் டேய் கோத்தா…. என்று சொல்லி  துப்பாக்கியை எடுத்து தீனாவின் தலையில் வைத்து மிரட்டியுள்ளார்.நீ என்னை அடிக்க வந்ததாக சொல்லி உன்னை இதே இடத்தில் சுட்டு போட்டு விடுவேன். மதுரையில் நான் பல கொலைகளை செய்திருக்கிறேன் என்று மிரட்டியுள்ளார்.

இதில் பயந்து தலைதரிக்க ஓடிய தீனா பணமும் வேண்டாம் மணலும் வேண்டாம் என்று சொந்த ஊரைவிட்டு இப்போது தலைமறைவாகி உள்ளார். இதே போல ஈக்காடு கண்டிகையில் ஒரு காதல் ஜோடி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணின் அப்பாவை மிரட்டி பெண்ணை நீ ஒழுங்காக வளர்க்கவில்லை என்று திட்டி அசிங்கப்படுத்தியுள்ளார்.

தவறு செய்த இளைஞரிடம் பணம் பெற்றுக் கொண்டு எந்த வழக்கும் பதியாமல் காப்பாற்றி  விட்டுள்ளார். அதேபோல ஈக்காடு கண்டிகையில் இருதரப்பிற்கும் தகராறு ஏற்பட்ட வழக்கில்  ஒரு தரப்பினரிடம் அவர்களை உடனே கைது செய்கிறேன் என்று அவர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு அடிபட்டவர்களிடம் அவர்களை நான் உடனடியாக கைது செய்கிறேன் என்று அவர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு வழக்கும் பதிவு செய்யாமல் யாரையும் கைது செய்யாமல் மாமுல்  மட்டும் வாங்கிக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கிக் கொண்டார் சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம்.  இது இந்த நிலையில்  பி-8 காவல் நிலையத்தின் தனிப்பிரிவு காவலர் விக்னேஷ் என்பர் இதே மணல் கொள்ளையர்களிடம் தனியாக மாமுல் பெற்றுக் கொண்டு திருட்டு மணல் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளார். என்கிற செய்தி தற்போது கிடைத்துள்ளது.

அவர் ஏற்கனவே திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் விற்பார்கள் இடமும் மதுபானம் விற்பவர்களிடமும் வாரந்தோறும் நாமும் வாங்கி வருவதாக சொல்கிறார்கள் அந்தப் பகுதி பொதுமக்கள். புல்லரம்பாக்கத்தை சேர்ந்த பார்வதி ,எம் ஜி ஆர் நகரை சேர்ந்த பாப்பாத்தி ஆகிய இருவரிடமும் எஸ்பி ஏட்டு விக்னேஷ் வாரந்தோறும் மாமூல் வாங்கி வருவதாக சொல்கிறார்கள் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள்.

மூன்று முறை புகார் கொடுத்தவர் மீது பொய் வழக்கு போட்ட போலீஸ். - chennireporters.com

இது தவிர பரமசிவம் பொண்ண புன்னப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாறன் என்பவரின் மகன் கமலேஷ் என்கிற எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை துப்பாக்கியை காட்டி மிரட்டி மணல் திருடுபவர்கள் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டு உள்ளார்.

துப்பாக்கியை காட்டியதும் மிரண்டு போன அந்த பள்ளி மாணவன் இரண்டு நாள் காய்ச்சலில் ஏற்பட்டு பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருப்பதாக சொல்கிறார்கள் அந்த பகுதி பொதுமக்கள். ஏறக்குறைய பரமசிவம்  பதவியேற்ற காலத்தில் இருந்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் எத்தனை? எத்தனை புகார்களுக்கு சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது?  எத்தனை புகார்களுக்கு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் படத்தில் வரும் பொறுக்கி பிராடு இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் கேரக்டர் தான் நினைவுக்கு வருகிறது என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குணசேகரன் என்பவர் சட்டம் ஒழுங்கு போலீசுக்கு துளிகூட சம்பந்தமில்லாத பரமசிவத்தின் மீது உயர் போலி சதிகாரிகள் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்கின்றனர் புள்ள புல்லரம்பாக்கம் பகுதி சென்ற பொதுமக்கள்.

தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அவர்கள் பதவி ஏற்ற பிறகு சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டோ அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் காவலர்கள் அல்லது காவல்துறை அதிகாரிகள் மீது அவர்களுடன் தொடர்பில் இருப்பது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ADGP action; குற்ற சம்பவங்களில் ஈடுபடும் போலீசாரை டிஸ்மிஸ் செய்வேன் ஏடிஜிபி அதிரடி. - chennireporters.com

ஆனால் பரமசிவம் உயர் அதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்தாமல் தான் தோன்றித்தனமாக தான் லஞ்சம் வாங்கி சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்து வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் அவருடன் பணியாற்றும் சக போலீஸ் அதிகாரிகள்

இதையும் படிங்க.!