chennireporters.com

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையின் உண்மை குற்றவாளி யார்?

வேலூர் தோட்டப் பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த கொள்ளை குறித்து போலீசார் தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்நிலையில் டீக்கா ராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் விசாரணை நடத்தியதில் நகை கடையில் கொள்ள அடிக்கப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரமும் கைப்பற்றப்பட்டது.பின்னர் போலீசார் டீக்கா ராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதியிடம் டீக்கராமன் தனக்கு யாரும் இல்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.இந்நிலையில் நீதிபதி இலவச சட்ட ஆலோசனை உதவி மையத்தினர் டீக்கா ராமனுக்கு சட்ட உதவிகள் வழங்க அறிவுறுத்தினார்.

போலீசாரின் விசாரணையில் எழும் சந்தேகம்.யார் துனையும் இல்லாமல் தனியாளாக
நகை கடையின் சுவரை எப்படி துளை போட்டிருக்க முடியும்.கடையை துளையிடும் போது சத்தம் வராமல் போனதா?

கொள்ளையன் டீக்காராம் நகைகளை எப்படி உருக்கினார்.நகை‌ உருக்க டீக்காராமுக்கு உதவியவர்களை போலீசார் இன்னும் ஏன் கைது செய்யவில்லை.கொள்ளையன் டீக்காராமன் முகவரி என்ன உறவினர்கள் யாரும் இல்லை யா?

இதையும் படிங்க.!