chennireporters.com

நீலிக்கண்ணீர் வடித்த சந்திரபாபு நாயுடுவை போட்டு தாக்கிய ரோஜா.

முதல்-அமைச்சர் ஆகாமல் இனிமேல் சட்டசபைக்குள் நுழைய மாட்டேன் என்று அழுது கண்ணீர் வடித்த முன்னாள் முதல்வர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.

எதிரிக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இன் நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா காரசாரமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

VEDIO CREDIT LOKAL APP

இந்த வீடியோ பதிவு ஆந்திரா கர்நாடகா கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட அரசியல் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் வீட்டு பெண்களை மட்டும் பேசினால் உங்களுக்கு வலிக்கும் மற்ற பெண்களை பேசினால் உங்களுக்கு இனிக்குமா.

உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்கிற வகையில் ரோஜாவின் அந்த வீடியோ பதிவு இருக்கிறது.

தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் மிகக் கேவலமாக விமர்சித்து செ** படத்தில் நடித்தவர் ரோஜா.

அவர் நடித்த அந்த சிடி எல்லாம் தன்னிடம் இருப்பதாக பேசிய சந்திரபாபு நாயுடு பேசியிருக்கிறார்.

இன்றைக்கு அவரைப் பற்றி பேசும் போது கோபம் வருகிறது வலிக்கிறது.இது சந்திரபாபு நாயுடுவின் ஆணாதிக்க போக்கு என்பது தெளிவாக தெரிகிறது.

நடிகை ரோஜா அந்த வீடியோ பதிவில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு இந்திய அரசியலில் பெரிய சவுக்கடியாக கருதப்படுகிறது.

தனக்கு நேரம் வருகிறபோது எதிரியை தாக்க சரியான நேரம் இதுதான் என்பதைப்போல ரோஜாவின் பேச்சு அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க.!