chennireporters.com

#dsp who built several lakhs; காக்கி சட்டையில் ஒரு கருப்பாடு; பல லட்சம் கல்லா கட்டிய டிஎஸ்பி.

சிறப்பு செய்தி# பிரத்யேக செய்தி#

தூத்­துக்­கு­டி மாவட்­டத்தில் லாக்அப் டெத் வழக்கில் சிக்கி ஆயுள் தண்­டனை பெற்ற ஸ்ரீ­வை­குண்டம் சப் டிவி­ஷன் டிஎஸ்பி ராம­கி­­ருஷ்ணன் அங்கு பொறுப்பே­ற்­றதிலிருந்து செய்த அரா­ஜ­கங்கள், அட்­ட­கா­சங்கள் குறித்த ஒரு சிறப்புப் பார்வை தான் இந்த செய்தி தொகுப்பு.

தூத்­துக்­கு­டியில் ஒரு அடேங்­கப்­பா வசூல் மன்னன் ‘இங்கு எஸ்பி, டிஐஜி. ஐஜி எல்லாமே நான்­தான் என்னை அசைக்க முடி­யாது”என்று ஆட்டம் போட்டவர்.

ஸ்ரீ­வை­குண்டம் சப் டிவி­ஷன் டிஎஸ்பி ராம­கி­­ருஷ்ணன்

மணல்­ கடத்தல் + குட்கா + ஒரு நம்பர் லாட்­டரி = மாதத்­துக்கு ரூ. 1.60 கோடி மாமூல் வசூல் செய்து தென் தமிழகத்தில் வசூல் ராஜா நம்பர் ஒன்னாக வலம் வந்தவர்.

இவரை கேட்­ப­தற்கு ஆளே இல்­லையா என்ற ரேஞ்­­சுக்கு தூத்­துக்­குடி காவல் மாவட்டம், ஸ்ரீ­வை­குண்டம் சப் டிவி­ஷனில் பணி­பு­ரியும் ஒரு டிஎஸ்பி ரவுடி போல வலம் வரு­வ­தையும், என்னை யாராலும் எதுவும் செய்ய முடி­யாது. உன்னால் முடிந்­த­தைப்பார் என்ற ரேஞ்­சுக்கு ஆண­வத்தில் அடா­வடி மாமூல் வசூலில் இறங்கி வியாபா­ரி­க­ளையும், பொது­மக்­க­ளையும், செங்கல் சூளை அதி­பர்­களையும் மிரட்­டிப் பணம் பறித்து காக்கி சட்டை போட்டு கொண்டு  கொள்­ளைக்­காரன் போல நடந்து கொள்­வது பொதுமக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவரைப் பற்றி எஸ்­பி­யிடம் புகார் அளித்­தாலும் எந்த பயனும் இல்­லை. அது கிடப்பில்தான் கிடக்கும் – இதுதான் தற்­போது ஸ்ரீ­வை­குண்­டம் சப் டிவிஷன் மக்­களின் ஆதங்­க­ம்.

‘தூத்­­­துக்­குடி காவல் மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சப்­டி­­வி­ஷனில் ­டி­எஸ்பியாக இருப்­ப­வர் ராமகிருஷ்ணன். இவர் இங்கு போஸ்டிங் போடப்­பட்டது முதல் இவ­ரது அரா­ஜ­கப்­போக்கு, அடா­வடி, யாராலும் அவரை அசைக்க முடி­யா­ததாகி விட்­டது என்­கின்­ற­னர். காரணம் கனி­மொழி, அனிதா ராதா­கி­ருஷ்ணன் ஆகி­யோரின் ஆசி­யோடு இங்கு இவ­ருக்கு போஸ்டிங் போடப்பட்­டி­ருப்­ப­துதான் என தூத்­துக்­குடி மாவட்ட காவல் துறை­யினரே புலம்­பு­கின்­றனர்.  ஒரு ரவுடிக்குறிய பத்து பொருத்­தமும்  இந்த டிஎஸ்­பிக்கு உண்டு.

ஒரு ரவுடிக்குறிய பத்து பொருத்­தமும்  இந்த டிஎஸ்­பிக்கு உண்டு.

கட்­டாய­மாக அழைத்து கறார் கட்­டப்­பஞ்­சா­யத்து, கட்­டாய மாமூல் வசூல் என ஒரு ரவு­டிக்­குறிய பத்து பொருத்­தங்­களும் இந்த டிஎஸ்பி ராம­கி­ருஷ்­ண­னுக்கு அம்­ச­மாக பொருந்­தும். யார் இவரை எதிர்த்து பேசி­னாலும் உட­ன­டி­யாக அரசு அதி­கா­ரியை பணி செய்ய விடாமல் தடுத்­த­தாக வழக்கு பாயும். ஒரு­வரை பழி­வாங்க வேண்டும் என்றால் எந்த லெவ­லுக்கும் இறங்கி செய்­வார். இவர் கட்­டப்­பஞ்­சா­யத்து செய்யும் இடங்­களில் யாரும் எதிர்த்து பேசக்­கூ­டாது. பேசினால் வழக்­குத்தான். மொத்­தத்தில் காக்கி யூனிபார்ம் போட்ட கவர்மண்ட் ரவு­டி­யாக, கொடூர வலம் வரு­கிறார் இந்த ராம­கி­ருஷ்­ணன் இப்படித்தான் இவரை ஸ்ரீ­வை­குண்டம், ஆழ்­வார்­ தி­ரு­ந­கரி பொது­மக்கள் அழை­க்­கின்­றனர்.

மணல்­ மாபி­யாக்­க­ளிடம் மாதம் ரூ. 1.50 கோடி மாமூல். தாமிரபரணி ஆற்­றுப்­ப­டு­கையில் மணல் அள்ளும் மாபி­யாக்­க­ளுடன் கைகோர்த்து மாதம் அதில் பல கோடி­களை அள்­ளு­கிறார் இந்த டிஎஸ்பி ராம­கி­­ருஷ்­ணன். திருட்டு மணல் அள்ளும் மாபியாக்களிடம் ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் என பேசி மாதம் ரூ. 1.50 கோடி வசூல் பார்த்து விடு­கிறார் இந்த டிஎஸ்பி.

செங்கல் சூளை அதி­பர்­க­ளிடம் மாதம் ரூ. 10 லட்சம் வசூல். ஸ்ரீ­வை­குண்டம் சப்டிவி­ஷனில் செய்­துங்கநல்லூர், ஸ்ரீவை­குண்டம், ஆழ்­வார்­தி­ரு­ந­கரி, குறும்­பூர், ஏரல், முறப்­ப­நாடு, மற்றும் சேரன்­குளம் ஆகிய 7 காவல் நிலையங்­கள் உள்­ளடங்­கி­­யுள்­­ள­ன. இவற்றில் சுமார் 50க்கும் மேற்­பட்ட செங்கல் சூளைகள் உள்­ளன. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் மாதம் 20 ஆயிரம் ரூபாய் என பேரம் பேசி மாதம் சுமார் ரூ. 10 லட்­சத்­துக்கும் மேல் செங்கல் சூளை வரு­மானம் மட்டும் மாமூ­லாக டிஎஸ்பி ராம­கி­ருஷ்­ண­னுக்கு வரு­கி­ற­து.

மாமூல் வசூ­லிப்­பதில் தனி வியூ­கம் ;  மாமூல் தர மறுக்கும் செங்கல் சூளை அதி­பர்­களை தனது ரவு­டி போலீஸ் பாணியில் ராம­கி­ருஷ்ணன் மடக்கி மிரட்டி மாமூல் வசூ­லிக்கும் பாணியே தனி. குறும்பூர், கடம்பாகுளத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வருவாய்த்துறையிடம் முறையாக அனுமதிச் சீட்டு பெற்று குளத்தாங்கரை மணலை எடுத்துக் கொண்டிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை டிஎஸ்பி ராம­கி­ருஷ்ணன் வேண்­டு­மென்றே அத்­து­மீறி திரு­டனைப் பிடிப்­பது போல மடக்­கிப் பிடித்துள்­ளார்.

மணல் கொள்ளை என அது தொடர்­பாக புகார் அளி­யுங்கள் என ஏரல் வட்டாச்சியரிடம் வலுக்­கட்­டா­ய­மாக டிஎஸ்பி ராம­கி­ருஷணன் புகார் தரச்சொல்லி கேட்­டுள்ளார். அதற்கு ஏரல் வட்டாட்சியர் இந்த மணல் முறைப்படி அர­சாங்­கத்­திடம் அனு­ம­தி பெற்று எடுக்­கப்­பட்­டுள்­ள­து. நாங்கள் ­எப்­படி பொய் புகார் தர முடியும். அதற்கு வாய்ப்பில்லை” என்று கண்­டிப்­புடன் மறுத்து விட்டார் அந்த நேர்­மை­யான வட்­டாட்­சி­யர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.

இதனால் ஏமாந்து போன டிஎஸ்பி ராம­கி­ருஷ்ணன் செங்­கல்­சூளை அதி­பர்­க­ள் மீது திருட்டு மணல் வாங்­கு­வ­தாக வழக்­குப்­ப­திவு செய்­து விடுவேன். என்ன செய்­யலாம் என அனை­வ­ரை­யும் ஸ்டே­ஷனுக்கு அழைத்து மிரட்டல் விடுக்­கவே, பயந்து போன சூளை அதிபர்கள் எதற்கு போலீசை பகைத்துக் கொண்டு என தாமா­கவே முன்வந்து ராம­கி­­ருஷ்­ணனுக்­கு மாதா மாதம் ரூ. 20 ஆயிரம் மாமூல் தரு­வ­தாக சம்­ம­தித்­தனர். இந்த வகையில் மொத்தம் 50 சூளை­களில் இருந்து ஸ்ரீ­வை­குண்டம் டிஎஸ்பி ராம­கி­ருஷ்­ண­னுக்கு மாதம் ரூ. 10 லட்சம் மாமூ­லாக வரு­கி­ற­து.

மாமூல் வசூ­லித்துக் கொடுக்க ஹிஸ்­டரி ஷீட் ரவுடி நியமனம்.

மாமூல் வசூ­லித்துக் கொடுக்க ஒரு மீடி­­யேட்டர் வேண்­டு­மல்­லவா அந்த மீடியேட்­ட­ராக ராம­கி­ருஷ்­ணன் ஆழ்வார்­தி­ரு­ந­க­ரியைச் சேர்ந்­த வர­லாற்றுப் பதி­வேடு ரவுடி அருண் பிரின்ஸ் என்­ப­வரை நிய­மித்­துள்ளார். அருண் பிரின்ஸ் கட்­டப்­ப­ஞ்­சா­யத்தில் கைதேர்ந்­தவர். இவரது மனைவி ராஜ­கு­மாரி தமி­ழ்­நாடு காவல்­து­றையில் இன்ஸ்­பெக்­ட­ராக உள்ளார். தற்போது தென்­காசி மாவட்­டத்தில் பணி­பு­ரி­வ­தாக தகவல். நெல்­லையில் ஏஎஸ்பி பல்­பீர் சிங் பல்­பி­டுங்­கிய விவ­கா­ரத்தில் பணி நீக்கம் செய்­யப்­பட்டு தற்­­போது மீண்டும் பணிக்கு வந்­­துள்ளார். இந்­த பிரின்ஸ் மூல­மா­கத்தான் ராம­கி­ருஷ்ணன் பெரிய தொகை­களை வசூல் செய்து கொள்­கி­றார். மனைவி மூலம் அருண் பிரின்ஸ், டிஎஸ்­பி­யிடம் நெருக்­க­மா­கி­யுள்­ளார்.

அரா­­ஜ­க பேர்­வழி டிஎ­ஸ்பி ராம­கி­ரு­ஷ்­ணனின் மாமூல் வசூல் தனி வியூ­கம்
அடுத்ததாக ஆழ்­வார்­தி­ரு­ந­கரி பஜார் கடை­களில் மாமூல் வசூ­லிப்பது எப்­படி என்று பிளான்­ போட்­டதில் டிஎஸ்பி ராம­கி­ருஷ்­ண­னுக்கு எதுவும் தோன்­ற­வில்லை. வௌிப்­ப­டை­யா­கவே ஆழ்­வார்­தி­­ரு­ந­கரி பஜார் வியா­பா­ரிகளிடம் மாமூ­ல் கேட்டும் அவர்­கள் யாரும் மாமூல் தர ஒத்­து­ழைக்­க­வில்லை.

டிஎஸ்பி ராம­கி­ருஷ்­ணனின் மாமூல் வெறிக்கு பக­டை­­க்­காயாக பயன்­ப­டுத்தப்­பட்ட வரு­வாய்­துறை அதி­கா­ரி­கள். இதனால் மெகா பிளான் ஒன்றை வரு­வாய்த்­து­றை­யை பக­டைக்காய் ஆக்கி ரவுடி அருண் பிரின்ஸ் என்­ப­வ­ருடன் இணைந்து டிஎஸ்பி தனது மெகா பிளானை தனி வியூ­க­மாக செயல்­ப­டுத்தி அதில் வெற்­றியும் கண்டு விட்­டார். அதா­வது ஆக்­கி­ர­மிப்பு அகற்றம் என்ற பெயரில் ஆழ்­வார்­தி­ரு­ந­கரி பஜாரில் போலீஸ் மற்றும் வரு­வாய்த்­து­றை­யி­னரை அழைத்து சென்று கட்­ட­டத்தை இடித்து விடுவோம் என மிரட்டல் விடுப்­பது. வியா­பா­ரி­களின் பயத்தை மூல­த­ன­மா­க்கி பயந்­த­வர்­க­ளிடம் மாதா மாதம் மாமூல் தந்தால் இடிக்க மாட்­டோம். வரு­வாய்த்­து­றைக்கும் சேர்த்து லஞ்சம் கொடுங்கள் என கேட்டு பெற்றுக் கொள்­­வது. இதுதான் அந்த மெகா மாஸ்டர் பிளான். இதையும் டிஎஸ்பி ராம­கி­­ருஷ்ணன் வெற்றிகர­மாக செயல்­ப­டுத்தி ஆழ்­வார்­தி­ரு­ந­கரி பஜார் வியா­பா­ரி­க­ளிடம் இருந்து மாதம் ரூ. 5 லட்சம் வரை மாமூல் மிரட்டி ரக­சி­ய­மா­க பெற்று வரு­கி­றார்.

டிஎஸ்­பியின் பண வெறியை பயன்­ப­டுத்திக் கொண்ட ரவு­டி. ராம­கி­­ருஷ்­ண­னின் இந்த மாமூல் வெறி­யை தனது தனிப்­பட்ட காழ்ப்­பு­ணர்ச்­சிக்கு பயன்­ப­டுத்திக் கொண்­டுள்ளார் ரவுடி அருண் பிரின்ஸ். ரவுடி அருண் பிரின்­சுக்கு தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வணி­க­வ­ளாக உரி­மை­யாளர் மீது உள்ள பொறாமை கார­ண­மாக பழி வாங்கி அவர் மீது போலீஸ் வழக்­­குப்­ப­திவு செய்து தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார். டிஎஸ்பி ராம­கி­ருஷ்ணன் வரு­வாய்த்­து­றைக்கும் மாமூல் வாங்­கித்­த­ரு­வ­தாக ஆசை காட்ட அவர்களும் டிஎஸ்­பியின் திட்­டத்­துக்கு சம்­ம­தித்­தனர்.

 

கனிமொழி திமுக, தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல் 2024, Lok sabha elections 2024 Tuticorin, Kanimozhi Karunanidhi DMK, Tuticorin Parliamentary Constituency elections 2024

எம்.பி கனிமொழி.

ஆக்­கி­ரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பஜார் கடைகள் மீது எந்த வித முன்­ன­றி­விப்பும், நோட்­டீசும் இன்றி அத்­து­­மீ­றிய தாக்­கு­தல்கள் நடத்த திட்­ட­மிட்­டனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பஜாரில் உள்ள கடை­களை அடித்து நொறுக்­கினர். அத்­துடன் ரவுடி அருண் பிரின்சின் பழி­வாங்கும் பட­லத்­தையும் தீர்த்து வைத்தார் ராம­கி­ருஷ்ணன். (அதற்கு சிறப்பு சன்­மா­­ன­மாக அருண் பிரின்ஸ் டிஎஸ்பி ராம­கி­­ருஷ்­ண­­னுக்கு தந்­தது ரூ. 2 லட்சமாம்) அதன்படி அந்­த வணிக வளாகத்தை வரு­வாய்த்­து­றை­யி­­ன­ருடன் இணைந்து இசக்­கி மற்றும் ரவுடி அருண் பிரின்ஸ் ஆகி­யோ­ருடன் கூட்டுச் சேர்ந்து டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அடித்து நொறுக்கி ரவுடி போல செயல்­பட்­டுள்ளார்.

இது குறித்து நியாயம் கேட்ட தனியார் வணிக வளாகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, வயதான மூதாட்டி மற்றும் இரு மகன்கள் ஆன வழக்கறிஞர்கள் மீதும் அரசுப் பணி­யா­ளரை பணி செய்ய விடாமல் தடுத்­த­தாக பொய் வழக்கு போட்டு ரவுடி பிரின்சின் உத்­த­ரவை நிறை­வேற்­றி­யுள்ளார் ராம­கி­ருஷ்ணன்.

ரூ. 2 லட்சம் பெற்றுக் கொண்டு குட்கா குற்­ற­வா­ளியை விடு­வித்­த­து
கடந்த ஒரு மாதத்­துக்கு முன்பு ஆழ்வார்திரு­­ந­க­ரி ­காவல் எல்­­லைக்­குட்பட்ட வாய்க்காங்கரை தெருவில் சுரேஷ் என்பவர் நடத்தி வந்த பெட்டி கடையில் குட்­கா புகை­யிலை விற்பதாக தகவல் கிடைத்து, மேற்படி கடையை ஆய்வு செய்து 50 கிலோ குட்கா புகையிலை சிக்­கி­­யுள்­ளது. கடைக்­காரர் மீது வழக்கு பதிவு செய்யாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த நபரை விடு­வித்து விட்­டார். ரவுடி அருண்­ பிரின்ஸ் மூலம் மிரட்டி சுமார் ரூ. 2 லட்சம் பேரம் பேசி அதனை வாங்கிக் கொண்­டார். இதற்கு உருட்டல், மிரட்டல் என டிஎஸ்பிக்கு இடைத் தரகராக இருந்து செயல்­பட்­டவர் ஆழ்­வார்­தி­ரு­ந­கரி காவல் ஆய்வாளர் ஸ்டெல்லாபாய்.

குட்கா ஏஜெண்டிடம் மாதம் ரூ. 2 லட்சம் மாமூல்.

ஆழ்வார்திருநகரி வியாபாரிகள் சங்கத்தலைவர் கண்ணன். இவர் ஆழ்வார்­தி­ரு­ந­கரி மேலபஜாரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது வீடு ஆழ்வார்திருநகரி, குழலார் தெருவில் உள்­ள­து. இந்த வீட்டில் கிட்டத்தட்ட 1,000 கிலோக்களுக்கு மேல் குட்கா புகையிலை பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது. கண்ணன் குட்கா மொத்த வியா­பார டீலராக வியாபாரம் செய்து வருகிறார். இதற்கு கண்ணன் டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு மாதா மாதம் ரூ. 2 லட்சம் மாமூ­லாக செல்­கி­ற­து. இதற்கு இடைத்தரக­ராக இருந்து செயல்படுபவர் ஆழ்வார்திருநகரியில் ஹிஸ்­டரி ஷீட் ரவு­டி­யாக போலீசால் வளர்க்­கப்­பட்டு வரும் அருண் பிரின்ஸ்.

ஒரு நம்பர் லாட்­டரி சீட்டு விற்­பனை மாமூல் ரூ. 2லட்சம்;  ஆழ்வார்திருநகரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. (எஸ்பி பாலாஜி சரவணன் இருந்­த வரை கட்­டுப்­ப­டுத்­தப்­­பட்டு இருந்­தது. தற்போதுள்ள எஸ்பி ஆல்பட் ஜான் கண்டு கொள்வதில்லை) டிஸ்பி ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றவுடன் இது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. ஆழ்வார்திருந­க­ரி நாசரேத் ரோட்டில் உள்ள பால்குளத்தை சேர்ந்த குமரன் என்பவர் பெட்டிக் கடையில் இந்த ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது இதற்கு மாதம் ஒன்றுக்கு ஸ்ரீ­வைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு 2 லட்சம் ரூபாய் மாமுல் செல்கிறது.

திருச்செந்தூர் பகுதியில் ரூ.65 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் | Newly constructed ...

 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

தனது தகிடு தத்­தங்கள் வெளியில் தெரி­யாமல் இருக்க டிரைவரை ஒதுக்கி விட்டு செல்ப் டிரைவிங். ஒரு காவல்துறை அதி­காரி அவர் பணி­பு­ரியும் சரகத்துக்கு உள்ள இடத்தில்தான் வசிக்க வேண்டும் என்பது அர­சாங்க விதி. ஆனால் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு மட்டும் அது விதி­வி­லக்கு. இவ­ருக்கு டிரைவர் இருந்தும் தானே வாக­னத்தை ஓட்டிச் செல்­கிறார். இவர் செய்யும் சட்­டப் புறம்­பான கட்­டப்­பஞ்­சா­யத்து பணம் வசூல் போன்ற விஷ­யங்கள் வௌியல் வந்து விடக்­கூ­டாது என்­பதால் டிரை­வரை கூட தனது அருகில் நெருங்க விட மாட்டார். தனது தகிடு தத்­தங்கள் வெளியில் தெரி­யாமல் இருக்க டிரைவரை ஒதுக்கி விட்டு செல்ப் டிரைவிங் செய்து வருகிறாராம் ராம­கி­ருஷ்­ணன்.

இவரது சொந்த வீடு திருநெல்வேலியில் உள்ளது. தினமும் அங்­கி­ருந்­துதான் ஸ்ரீ­வை­குண்­டத்தில் உள்ள தனது  அலுவலகத்துக்கு வந்து செல்கிறார். மதிய நேரம் தனது வாகனத்தில் திரு­­நெல்­வே­லியில் உள்ள வீட்­டுக்கு (செல்ப் டிரை­விங்) சென்று விட்டு நன்கு தூங்கி ஓய்­வெடுத்து விட்டு மாலையில் அலு­வ­­லகம் வந்து விட்டு மறுபடியும் வீட்டிற்கு சென்று விடுவார்.

தனது வாகனத்திற்கு பெட்ரோல் கணக்கு போலியாக அரசாங்கத்திடம் காட்டி செயல்படுகிறார். இவர் செல்ப் டிரைவிங்கில் தினமும் நெல்லை சென்று வரு­வது திருநெல்வேலி, சிவந்திப்பட்டி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் போலீஸ் செக் போஸ்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால் தெளிவாக தெரியும்.

ஜாதிப்பிரச்­சி­­­னையைத் தூண்டும் வண்ணம் செயல்­பா­டு. கடந்த 18.11.2024 அன்று ஸ்ரீவைகுண்டம் டிஎம்எஸ் கல்யாண மண்டபத்தில் வைத்து மணக்கரை பேச்சுமுத்து என்ற ரவுடியை கைது செய்கிறேன் என்ற பெயரில் சட்ட ஒழுங்கை காக்­கும் காவல்துறை அதி­கா­ரி­யான ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் சீருடையுடன் சென்று தேவர் சமூகத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற காழ்ப்­பு­ணர்ச்­சியில் 80க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். அதில் ஒன்றும் அறி­யாத வழக்கறிஞர் துரை என்பவர் மீதும் பொய்யாக எப்­ஐஆர் போட்டு அவரை வேண்­டு­மென்றே அவ­மா­னப்­ப­டுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளா­ர்.இதே போல் ஆழ்வார்திரு­ந­கரி காவல் நிலையத்தில் வெள்ளரிக்கா விருத்தியைச் சேர்ந்த சரவணன் தேவர் என்பவர் மீது ஒரு பொய்யான கொலை வழக்கு பதிவு செய்து தேவர் சமூகத்தை இழிவு படுத்த வேண்டும் என்று கெட்ட எண்ணத்தில் செயல்பட்டுள்ளார். இது தொடர்­பாக பாதிப்­ப­டைந்த (சர­வணன் தேவர்) மனுதாரர் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி ஜாமீன் பெற்றார். மேலும் தன் மீது போடப்­பட்ட வழக்கு தொடர்­பாக சிபிசிஐடி விசாரணை கேட்டு முறையிட்டுள்ளார். (ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மேற்­பார்­வையில் இது நடந்தால் நியா­ய­மான விசா­ரணை நடக்­காது என்­பதால்….)

செய்துங்­க­நல்­லூரைச் சேர்ந்த சுடலை மணி என்ற வழக்­க­றிஞர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் பணி­பு­ரிந்து வரு­கிறார். இவர் மணி மக்கள் இயக்கம் என்ற சமூக சேவை அமைப்பு நடத்தி வரு­கிறார். சுடலை மணி முறப்­ப­நாடு பகு­தியில் ஒரு இடத்தை அதன் உரி­மை­யா­ளரிடம் பேசி விவ­சாயம் செய்­வ­தற்­காக முறைப்­படி குத்­த­கைக்கு எடுத்­துள்ளார். அப்­போது அந்த இடத்­துக்குள் நுழையக் கூடாது அது எனக்கு சொந்­த­மா­னது என பக்கத்து நிலத்தில் உள்­ளவர் பிரச்­சினையை கிளப்ப இந்த பஞ்­சா­யத்து எதிர் தரப்­பு ரவுடி அருண் பிரின்ஸ் மூலம் டிஎஸ்­பியின் கவ­னத்­துக்கு கொண்டு சென்றனர்.

சுடலை மணிக்கு எதி­ராக ஒரு புகாரை வாங்கிக் கொண்ட டிஎஸ்பி ராம­கி­ருஷ்ணன் ரூ. 2 லட்­சத்தை அருண் பிரின்ஸ் மூலம்­ லஞ்­ச­மாக பெற்றுக் கொண்டு வக்கீல் சுடலை மணிக்கு சம்மன் அனுப்பி விசா­ர­ணைக்கு வரச்­சொல்லி உள்­ளார். அந்தப் பஞ்­சா­யத்து இன்னும் சென்று கொண்­டி­ரு­க்­­கி­றது. வக்கீல் சுடலை மணி­யிடமும் டிஎஸ்பி தரப்பு லஞ்சம் கேட்க தர இய­லாது அவர் மறுத்து நீதி­மன்­றத்தில் பார்த்துக் கொள்­வ­தாக கூறி விட்டார்.

மேற்­கண்ட தக­வல்கள் அனைத்தும் எஸ்பிக்கும், டிஐ­ஜிக்கும், ஐஜிக்கும் தெரியுமோ தெரி­யா­தோ. ஆனால் டிஎஸ்பி ராம­கி­ருஷ்ணன் அர­சி­யல்­வா­தி­களின் (கனிமொழி, அனிதா ராதா­கி­ருஷ்­ணன்) அடி வருடி என்­பதால் கண்டு கொள்­ளாமல் விடப்­பட்­டுள்ளதாக கூறப்­ப­டு­கி­ற­து.

தெற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா.

‘யாராலும் என்னை அசைக்க முடி­யாது: ஸ்ரீ­வை­குண்டம், ஆழ்­வார்­தி­ரு­ந­க­ரிக்கு நான்­தான் எஸ்பி, ­டி­ஐஜி, ஐஜி எல்லாம் நான்­தான். என்னை யாராலும் அசை­க்க முடி­யாது என வௌிப்­ப­டை­யா­கவே ராம­கி­ருஷ்ணன் சவால் விட்­ட­படி செயல்­ப­டு­வதால் ஸ்ரீ­வை­குண்டம் சப்­டி­விஷன் பொது­மக்கள், வியா­பா­ரி­கள் ஒரு பக்கம் அதிர்ச்­சி­யிலும் மறு­பக்கம் கொதிப்­பிலும் உள்­ளனர். மேலும் ஸ்ரீ­­வை­குண்டம் காங்­கிரஸ் தொகுதி என்­பதால் அந்த தொகுதி எம்பி ஊர்­வசி அமிர்­த­ராஜை கலாய்ப்­பதற்­கா­கவே ராம­கி­ருஷ்ணன் அங்கு டிஎஸ்­பி­யாக அமர்த்­தப்­பட்­டுள்­ளாரா என்­ற கேள்­வியும் மக்கள் மனதில் தோன்றத் துவங்­கி­யுள்­ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி குடும்பத்தில் உள்ளவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது சொத்துக்களை ஆய்வு செய்து வழக்கு தொடர வேண்டும் என்கின்றனர். அது தவிர வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரது வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்கின்றனர் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

 

இதையும் படிங்க.!