தே.மு.தி.க கட்சி தலைவர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விஜயகாந்தின் உடல்நிலை தீவிரமாக கண்காணித்து வருவதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தே.மு.தி.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனைக்கு தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.