chennireporters.com

#Bill collector arrested; 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது.

திருநின்றவூர் நகராட்சியில் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த திருநின்றவூர்பகுதியை சேர்ந்தவர்  மாயாண்டி. ஓய்வு பெற்ற EE., TNEB. அவரது மருமகள்   தமிழ்செல்வி திருநின்றவூரில் (முகவரி: கதவு எண்.16, 2வது தெரு, திருவேங்கடம் நகர், வார்டு 14, திருநின்றவூர்) ஒரு புதிய வீட்டைக் கட்டயுள்ளார்.

புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.15000 லஞ்சம் கேட்பு.. முன் பணமாக ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக வரி வசூல் அதிகாரி கைது

புகார்தாரர் தனது மருமகளின் பெயரில் கட்டியுள்ள வீட்டிற்கு திருநின்றவூர் நகராட்சியில் வீட்டு வரியினை கட்ட  25.01.2025  மனு அளித்துள்ளார். அதன் பிறகு நகராட்சி பில் கலெக்டர்  சண்முகம் மனுதாரரின் வீட்டை அளந்து பார்த்து முதலில் காலி மனைக்கு  நில வரியை செலுத்துமாறு அறிவுறுத்தினார். அறிவுறுத்தல்களின்படி, புகார்தாரர் 19.02.2025 அன்று காலி நில வரி ரூபாய் 18, 221 யை கட்டியுள்ளார், பின்னர் புகார்தாரர் வீட்டு வரி குறித்து சண்முகத்திடம் கேட்டார், அதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை.

லஞ்சம் வாங்கி கைது செய்யப்ட்ட சண்முகம்.

மேலும், புகார்தாரர் 04.03.2025 அன்று சன்முகத்தை தொலைபேசியில் அழைத்து வீட்டு வரி குறித்து கேட்டார், அந்த நேரத்தில் சண்முகம் அவரை நேரில் சந்திக்க அறிவுறுத்தினார். அதன்படி, புகார்தாரர் 05.03.25 அன்று அவரது அலுவலகத்தில் சண்முகத்தை சந்தித்து வீட்டு வரி குறித்து விசாரித்தார். வீட்டு வரியை நிர்ணயிக்க ரூ.15000/- லஞ்சமாக வழங்குமாறு சன்முகம் புகார்தாரரிடம் கூறியுள்ளார், மேலும் ரூ.5000/- முன்கூட்டியே கொடுக்குமாறும், மனுதாரரின் வீட்டு வரி நிர்ணயம் முடிந்த பிறகு மீதமுள்ள தொகையை கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.THIRUNINDRAVUR MUNICIPLITYநகராட்சி பில் கலெக்டர் சண்முகத்திற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத  மாயாண்டி நேற்று 6.3 2025 அன்று திருவள்ளூர், காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் தெரிவித்தார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விழிப்புணர்வு பதிவு ; | Whatsapp Useful Messagesஅதன் பேரில் டி.எஸ்.பி. கணேசன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மாலா வழக்கு பதிவு செய்து  7.6.2025 திருநின்றவூர் நகராட்சி பில் கலெக்டர்  சண்முகம் புகார்தாரர் மாயண்டியிடம் ஏற்கனவே லஞ்சமாக கேட்ட ரூபாய் 15,000 த்தில் ரூபாய் 5,000 த்தை இன்று முன்பணமாக கேட்டு பெற்ற போது காவல் துணை கண்காணிப்பாளர் வி.கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கணேசன்

லஞ்ச பணம் பெற்றதும் சண்முகத்தை காவல் ஆய்வாளர் மாலா கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.Officials taking bribes; லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும். - chennireporters.comஅதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை எப்போதும் கைவிடப் போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் பொதுமக்களே தங்களுடைய வேலைகள் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்களுடைய வேலைகள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் லஞ்சம் கொடுக்க முன் வருகிறார்கள். அதையே காரணம் காட்டி அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில் அதிக கவனம் செலுத்தி கூடுதலாகவும் லஞ்சம் பெற்று வருகிறார்கள்.

ரேஷன் கார்டு கொடுக்க லஞ்சம் கேட்ட ஊழியா்! Iruthi theerppu : Tamil Investigative Magazine | Latest tamil news | 24/7 News | Breaking News | Live News

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துகளில் லஞ்சம் தலைவிரிதாடுவதை ஒருபோதும் தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை நிரந்தர பணி நீக்கம் செய்வதும் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான் லஞ்சத்தை முற்றிலுமாக தடுக்க முடியும்.

மத்திய மாநில அரசிலுள்ள எல்லா துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவை செயல்படுத்தினால் இந்தியாவில் லஞ்சம் வாங்குவதை முற்றிலும் தடுக்கப்படும். ஆனால் அரசு இத்தகைய உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

இதையும் படிங்க.!