chennireporters.com

பாஜக தலைவர் அண்ணாமலை, குஷ்பூ, எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் டிஜிபியிடம் புகார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவின் தலைவர் கனகராஜ் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு விடம் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் பொய் தகவல்களை பரப்பி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.அவர் அளித்த புகாரின் கூறப்பட்டுள்ளதாவது:அரியலூர் மாணவி லாவண்யா தஞ்சாவூர் பொது மருத்துவமனையில் உயிரிழந்ததைக் கண்டித்து பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை அண்மையில் ஒரு போராட்டம் நடைபெற்றது.

சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர். நிலுவையில் உள்ளது.தொடர் விசாரணை நடந்து வருகிறது.முதற்கட்ட அறிக்கையின்படி இறந்த லாவண்யாவின் மரண அறிவிப்பின்படி, எந்த மத மாற்றமும் செய்ய வில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இறப்புக்கான காரணத்திற்காக தொடர்புடைய உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் எங்களுக்கும் எங்கள் ஆர்.டி.ஐ துறைக்கும் விரிவான விசாரணை தேவைப்பட்டது.

ஆனால் விசாரணை நிலுவையில் இருக்கும் போது பாஜக தலைவர் அண்ணாமலை நடிகை குஷ்பு, எச்.ராஜா ஆகிய மூவரும் தமிழகம் முழுவதும் பொது ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் தவறான கருத்து க்களை பேசி போராட்டம் நடத்துவது முற்றிலும் அநியாயம்.

எனவே மேற்கண்ட பாஜக தலைவர்கள் அண்ணாமலைகுஷ்பு மற்றும் எச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து சதியில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது சமூக வலை தளங்களில் போலிச் செய்திகளை பரப்புவது போலீஸ் விசாரணையை முடக்குவது
போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையிலும் மற்றும் மாநில அரசை இழிவுபடுத்தும் நோக்கில்செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் வகுப்புவாத வன்முறை, கலவரத்தைத் தூண்டிவிடுதல்போன்ற பிரிவுகளின் கீழ் 153A, 295A, 505, 34, 298, 509, 341, அண்ணாமலை,
H.ராஜா, குஷ்பு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று கனகராஜ் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!