வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது!
சென்னை மக்கள் பயணத்தை கொஞ்சம் எளிதாக்கி தருவதில் ‘மெட்ரோ ரயில்கள்’ மிக முக்கிய பங்காற்றுகின்றன. இதில் தினமும் பயணம் செய்பவர்கள் க்யூ லைனை தவிர்க்க மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், வரும் ஏப்ரல் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லுபடியாகாது என்பது தற்போதைய லேட்டஸ்ட் தகவல்.உடனே, பதற்றமாகாதீர்கள் மெட்ரோ பயணிகளே… இனி புதியதாக ‘சிங்கார சென்னை கார்டு’ வரப்போகிறது. இப்போதே சிங்கார சென்னை கார்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.Singara Chennai கார்டுகள்…
இந்த கார்டை ஸ்டேட் பேக் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து வழங்குகிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் மட்டுமல்லாமல், லோக்கல் ரயில்கள், பஸ்களில் கூட பயணம் செய்யலாம். இது மட்டுமல்ல…ஷாப்பிங், ஹோட்டல் பில்களைக் கூட இந்தக் கார்டை பயன்படுத்தி கட்டலாம்.

இந்தக் கார்டில் ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகை க்ளோபல் பேலன்ஸ், ரீடெயில் பேலன்ஸ் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். க்ளோபல் பேலன்ஸை பயணங்களுக்காவும், ரீடெயில் பேலன்ஸை ஷாப்பிங்குகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
