திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா என்று தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தனது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும் அதுதான் என்னுடைய பிறந்தநாள் செய்தி என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக முழுவதிலும் உள்ள அமைச்சர் பெருமக்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர் கள் என தனது கட்சியைச் சார்ந்த அனைவரும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
‘இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

/indian-express-tamil/media/media_files/2025/03/01/nG5mHxWCtYgMWr6o23KF.jpg)
இந்த நிலையில், ‘இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.


அப்போது, “மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும். இந்தி திணிப்பு கூடாது என்பதே எனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி. இருமொழி கொள்கை தான் கொண்டு வர வேண்டும். என்னுடைய கவலை எல்லாம் நாட்டை பற்றி தான், மாநிலத்தை பற்றி தான்.” என்று அவர் தெரிவித்தார்.
