chennireporters.com

#coimbatore tasmac; திருவள்ளுவர் தினத்தன்று கள்ள மது விற்றவர்களிடம் பிச்சை எடுத்த டுபாக்கூர்கள்.

நாடு முழுவதும் இடுகாட்டில்  ஒவ்வொரு ஜாதிக்கும், மதத்திற்கும் தனித்தனயாக  இடங்கள் உண்டு. ஆனால் டாஸ்மாக் கடையில் மட்டும்  தான் ஜாதி, மதம், மொழி, இனம் இவையெல்லாம் கடந்து அனைவரும் அன்புடன் சந்தோஷமாய் ஒன்று கூடுவார்கள்.

 

Tasmac Bar in Olymbus,Coimbatore - Best near me in Coimbatore - Justdial

ஆனால் அந்த இடத்தில் அழைக்காத விருந்தாளிகளாக, குறிப்பாக சமூக விரோத,  குற்ற நடவடிக்கைகளில், மறைந்து கிடக்கும் உண்மைகளை ஊருக்கு உரக்கச் சொல்லும்  ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் கோயமுத்தூர் மாவட்ட சில, பல  டூபாக்கூர்கள் தங்களது விசிட்டிங் கார்டுகளை (Visiting Card) திருவள்ளுவர் தினத்தன்று ஏன்..? எதற்காக..? அள்ளிக் இறைத்திருக்கிறார்கள்..? அதையும் சிறப்பாக சேகரித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஒரு மது பிரியர்.

சொறி நாயை கூட அழைக்காத டாஸ்மார்க் கடைகளில் ஏன் எதற்காக இத்தனை (Visiting Card)  விசிட்டிங் கார்டுகளை கொடுத்துள்ளனர் என்பதை உளவுத்துறையாவது அல்லது நல்ல ஊடகங்களாவது இந்த மர்மத்தை வெளிக்கொண்டு வரவில்லை. எல்லாருமே திருடங்களா இருந்தா நாம் என்ன செய்ய முடியும். ஆகையால் என்ன நடந்தது? என்பதை  விரிவாக விசாரித்து பதிவு செய்கிறோம்.

டாஸ்மார்க் கடையில் திருவள்ளூவர் தினத்தன்று கள்ள சந்தையில் மது விற்ற பார்கார ர்களிடம்விசிட்டிங் கார்டு கொடுத்து 200 பிச்சை எடுத்த டுபாக்கூர் ரிப்போட்டர்கள்.

இறுதியாக நமக்கு கிடைத்த நம்பகமான தகவல் என்னவென்றால் நாங்கள்தான் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்கள் மற்றும் நம்பர் ஒன் நாளிதழ் என்று மார்தட்டிக் கொண்டு இருக்கும் எந்தப் பத்திரிக்கையும் அரசு விடுமுறை நாட்களில் கூட கள்ள மார்க்கெட்டில்  சாராயத்தை விற்பனை செய்து காசு சம்பாதிக்கும்  திருடர்களிடம்  ரிப்போட்டர்களின்   அடையாளத்தின் சான்றின் சாட்சி தான் இந்த  (Visiting Card) விசிட்டிங் கார்டுகளை கொடுத்து பணம் வாங்கிச்சென்றுள்ளனர்.திருவள்ளுவர் தினத்தன்று கோவை மாவட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன அதேபோல திருப்பூர் மாவட்டத்திலும் முன்னுருக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது இந்த இரண்டு மாவட்டத்திலும் ஆரண்ணை பதிவு இல்லாத நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஏற்கனவே வெளிவரும் பத்திரிகை மற்றும் இணையதளங்களில் அடையாள அட்டையை போலியாக தயாரித்து வைத்துக் கொண்டு அதிலேயே விசிட்டிங் கார்டும் அடித்து வைத்துக் கொண்டு கள்ளத்தனமாக மது விற்ற அனைத்து பார்களுக்கும் சென்று விசிட்டிங் கார்டு கொடுத்து 300 ரூபாய் 200 ரூபாய் என 100க்கும் மேற்பட்டோர் வாங்கியுள்ளனர் அதாவது ஒரு கடையில் மட்டுமே எழுபதுக்கும் மேற்பட்ட டுபாக்கூர்கள் சென்று அடையாள அட்டை காண்பித்து ஒரு விசிட்டிங் கார்டையும் கொடுத்து மிரட்டி தலைக்கு தலா 200 ரூபாய் வீதம் பணம் வாங்கியுள்ளனர்.

 

Petitions against TASMAC bar permit dismissed

கோயம்புத்தூர் பத்திரிகையாளர்கள் அதாவது டுபாக்கூறுகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பைக்கில் சென்று பசில் வேட்டை செய்வார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் மூன்று பேர் அல்லது நான்கு பேர் கொண்ட கும்பலாக காரில் சென்று வசூல் வேட்டை செய்வார்கள் டாஸ்மாக் பாரில் பணியாற்றும் ஊழியர்கள் நமது செய்தியாளருக்கு அனுப்பிய படங்கள் தான் இந்த படங்கள் அது மட்டும் இல்லாமல் சில வீடியோக்களையும் அனுப்பி இருக்கிறார்கள் சொல்ல பார்க்க வாய் கூசுகிற அளவிற்கு உள்ளது அந்த வீடியோ காட்சிகள்.

கடையில் மேலாளர்கள் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியூஸ் 7 பத்திரிகையில் பணியாற்றிய பல்லடம் நேச பிரபுவுக்கு ஏற்பட்ட நிலைமை கோயம்புத்தூரிலும் திருப்பூரிலும் குறிப்பாக இந்த டுபாக்கூருகளுக்கு தக்க பாடம் புகட்டினால் பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுவார்கள் என்கிறார்கள். டாஸ்மாக் கடை ஊழியர்கள்.

திருட்டு பூனைகளுக்கு இங்கு யார் மணிக்கட்ட போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி

இதையும் படிங்க.!