chennireporters.com

#Cuddalore van accident; ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி.

கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கும் பாய்மடைந்த குழந்தைகளின் குடும்பத்திற்கும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆறுதல்களையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கடலூர் மற்றும் ஆலப்பாக்கம் இடையே உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. வேனில் இருந்த மற்ற மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேன் ஓட்டுனர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் ரயில் விபத்து: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்! Train accident
இந்த விபத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 6-ம் வகுப்பு மாணவர் நிவாஸ் , 10-ம் வகுப்பு மாணவன் செழியன் மற்றும் 11-ம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதால் செம்மங்குப்பம் பகுதியில் பணியில் இருந்து ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
Cuddalore Train-School Van Accident: What Happened and What You Need to Know | Cuddalore Train-School Van Accident: What Happened and What You Need to Know|English Newstrack
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” எனத் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!