chennireporters.com

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகள்.

நடை பெற இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு மாவட்ட அளவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.

அதனால் காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காக திமுக கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதேநேரத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகள் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.உதாரணத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களும்,12 மாவட்ட ஊராட்சிகளும் இருக்கிறது.

திமுக வேட்பாளர்களின் பட்டியலை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் நேற்று வெளியிட்டார்.அதில் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை.

அவர்கள் கேட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.காங்கிரஸிற்கும் கேட்ட இடங்கள் ஒதுக்கப்படவில்லை.ஒரே ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் நாங்குநேரி மானூர் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸார் தனித்துப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.இடப்பங்கீடு அதிர்ச்சி அடைந்துள்ள சி.பி.எம். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கூட்டணி பேச்சு முறையாக நடக்கவில்லை.

நாங்கள் வழக்கமாகப் போட்டியிடும் அம்பாசமுத்திரம் ராமையன்பட்டி உள்ளிட்ட சில ஊராட்சி வார்டுகளை கேட்டோம்.எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

எனவே எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் நாங்கள் தனியாக வேட்புமனு தாக்கல் செய்து விட்டோம் இவ்வாறு கூறினார்.அதேநேரத்தில் திமுகவில் சீட்டு பெறுவதில் கட்சியில் உச்சகட்ட கோஷ்டிப் பூசல் நீடித்து வருகிறது.

இது குறித்து திமுக சார்பில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என இருவருக்கும் சீட்டு தரப்பட்டுள்ளது.பாரம்பரியமாக கட்சியில் இருந்தவர்களை விட்டுவிட்டு அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கு மாவட்ட ஊராட்சி தலைவராக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

தகுதியான திமுக வேட்பாளர்களுக்கு சீட்டு தர மறுக்கப்பட்டுள்ளது.வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே திமுக பிரமுகர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.

இதனால் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.என்று திமுகவின் ஒரு பிரிவினர் கூறினார்கள்.

இதையும் படிங்க.!