chennireporters.com

முதலிரவில் கணவனை ஏமாற்றிய இளம் பெண்ணிடம் டி.எஸ்.பி விசாரணை.

kari 1

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைப்பேட்டை சேர்ந்தவர் முத்து வேலன் இவரது மகன் வெற்றிவேல்.அறந்தாங்கியை சேர்ந்த சேர்ந்த நாகநாதன் மகள் சூர்யாவுக்கும் கடந்த 17ஆம் தேதி புதுவயிலில் உள்ள கோயிலில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடை பெற்றது.

இதையடுத்து அன்று இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில் புதுமண தம்பதி இருவரும் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட அறையில் சென்றனர்.

இருவரும் தங்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.மனைவி சூர்யாவிடம் வெற்றி வேல் திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் உன்னை திருமணம் செய்து கொண்டேன் மேலும் உன்னை கடைசி வரை நல்ல முறையில் காப்பாற்றுவேன் என்று உண்மை யை சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் புதுப்பெண் சூர்யா கணவரை தனியாக தூங்க சொல்லிவிட்டு அவரும் அந்த அறையில் தூங்கியுள்ளார்.அதிகாலை கண் விழித்த வெற்றிவேல் அவரது அப்பாவை எழுப்பி தன் அறையில் மனைவி சூரிய மயங்கி கிடப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் சூர்யாவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து சூர்யாவின் பெற்றார் மருத்துவ மனைக்கு வந்தனர்.

அவர்களுடன் சூர்யா தன் கணவர் சைக்கோ போல் நடந்து கொள்வதாகவும் மேலும் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி தன்னுடைய தலைமுடியை வெட்டிய தாகவும் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் பெற்றோருடன் சூர்யா காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து புது மணத்தம்பதிகள் இருவரையும் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்தனர்.

இதன் பின்னர் காரைக்குடி டி.எஸ்.பி.அருண் புதுமண தம்பதி இருவரிடமும் விசாரணை மேற்கொண்டார்.விசாரணையில் மணப் பெண் சூரியாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் நடந்திருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க.!