chennireporters.com

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மனிகண்டனின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை ஐகோர்ட் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக,

அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.Chennai_High_Court

அவருக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என நடிகை சாந்தினி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட், ஜூன் 9ஆம் தேதி வரை மனுதாரரை (மணிகண்டன்) கைது செய்யக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரின் முன் ஜாமின் மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், முன்னாள் அமைச்சரான மணிகண்டன் 12 ஆண்டுகள் அரசு மருத்துவராக பணியாற்றியவர்.

பின் அரசியலுக்குள் நுழைந்தார் புகாரில் கூறியுள்ள குற்றச் சாட்டுகளை பொறுத்தவரை திருமணமானவர் என தெரிந்துதான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளார்.

நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை.நடிகையை மனுதாரருக்கு தெரியும.புகைப்படங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார் விசாரணைக்கு ஒத்துழைக்க மனுதாரர் தரப்பு தயார்.

இடைக்கால பாதுகாப்பாக முன் ஜாமின் வழங்க வேண்டும்.காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டுள்ளது கரு உருவாகும் முன் எப்படி கருக்கலைப்பு செய்ய முடியும். உதைத்ததாக புகாரிலும் கூறப்படவில்லை.

கருவுக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க வேண்டும். காவல்துறை விசாரிக்கட்டும் மனுதாரர் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யட்டும்.
திருமணமாகாதவன் என்று புகார்தாரரிடம் கூறவில்லை. அது அவருக்கும் தெரியும்.

அதனால், அவரை நம்ப வைத்து ஏமாற்றியதாக கூற முடியாது. எந்த மிரட்டலும் விடுக்கவில்லை.ஏப்ரல் 15 வரை மணிகண்டனுடன் வசித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கியிருக்க வேண்டும்.

ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.ஆனால், அவ்வாறு செய்யவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.அரசுத்தரப்பில், 2017ல் பரணி என்பவர் மூலம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகை அறிமுகம் ஆகியுள்ளார்.

நடிகை சாந்தினி, மலேஷியாவின் தென் மாநில தூதராக உள்ளார்.மலேஷியாவில் முதலீடு தொடர்பாக சந்தித்துள்ளார்.திருமணம் செய்து கொள்வதாக கூறி மனுதாரர் ஏமாற்றியுள்ளார் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார்.

உதைத்ததால் படுகாயமடைந்துள்ளார்.விசாரானை ஆரம்ப நிலையில் உள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.மனுதாரரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளது.ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது.மனுதாரர் முன்னாள் அமைச்சராக இருந்தவர் என்பதால், அவர் சாட்சிகளை கலைக்க கூடும் என வாதிடப்பட்டது.சாந்தினி தரப்பில், திருமணம் செய்து கொள்வதாக தோற்றத்தை ஏற்படுத்தியதால் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் வழக்கொன்றில் தெரிவித்துள்ளது.முதலில் சாந்தினி யார் என தெரியாது என கூறிய மனுதாரர்,

பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஷ், அனைத்து தரப்பினருக்கும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு,மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க.!