chennireporters.com

#Goods train fire near Tiruvallur; திருவள்ளூர் அருகே கூட்ஸ் ரயில் தீ விபத்து வெளி மாநில ரயில்கள் ரத்து. பொதுமக்கள் அவதி.

சென்னையை ஒட்டிய திருவள்ளூரில் சரக்கு ரயில் தீப்பிடித்ததால், சென்னை செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத் உட்பட முக்கியமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.  திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக சென்னை செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து
  • சென்னை செல்லும் ரயில்கள் ரத்து
  • சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து; 7 மணி நேரம் போராடி தீயை அணைத்த  வீரர்கள்!

திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சேலம் – அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரல்-கோவை விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர் சிட்டி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.
Arakkonam Trains Halted Fire Accident,திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில்  தீவிபத்து… அரக்கோணம் ரூட்டில் ரயில்கள் நிறுத்தம்! - goods train fire  accident near tiruvallur affects ...

மறு மார்க்கத்திலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கோவையில் இருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் கோவை-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரயில்கள் சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.கோவை மாவட்டம் சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் மற்றும் கோவை மற்றும் சென்னை சென்ட்ரல் இடையேயான இன்டர்சிட்டி, உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் மட்டும் இன்று சேலத்திற்கு இயக்கப்பட்ட உள்ளனர்.

சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சேலத்தில் இருந்து சென்னைக்கு வழக்கத்தை விட அதிகமான பயணிகள் பேருந்துகளில் சென்றனர்.ரயில்வே ஊழியர்கள் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளுக்குத் தகவல் அளித்தனர். சேலம் வழியாகச் சென்னை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து அவர்கள் விளக்கினர்.சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இது குறித்து சில தகவல்களை தெரிவித்தனர்.

சென்னை திருவள்ளுவர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சேலம் வழியாக சென்னை செல்ல வேண்டிய ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.எனவே, ரயில் பயணிகள் பலரும் பேருந்துகளில் சென்னைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டது” என்று அவர்கள் கூறினர். அதாவது, ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டதால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு மேல் சென்னைக்கு 20 பேருந்துகள் இயக்கப்படும்.

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து..சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்  - எங்கிருந்து தெரியுமா? - thiruvallur train accident more buses are being  operated from ...

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆனால், ரயில் பயணிகள் அதிகமாக இருந்ததால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. “சேலத்தில் இருந்து மதியம் வரை, சென்னைக்கு கூடுதலாக 5 பேருந்துகள் இயக்கப்பட்டன.மேலும், ஓசூர் மற்றும் திருப்பத்தூரில் இருந்து 3 பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் உடனடியாகச் செயல்பட்டு கூடுதல் பேருந்துகளை இயக்கியதால், பயணிகளின் சிரமம் ஓரளவுக்குக் குறைந்தது.

இதையும் படிங்க.!