சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பற்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதை தொடர்ந்து இந்தியா முழுவதும் அவருக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமித்ஷாவின் உண்மை முகம் என்ன என்பது பற்றி பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தில் அவர் எதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார் அவர் அங்க செய்த அரசியல் சதிகள் குறித்து இந்த பதிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வந்த பதிவை நாம் அப்படியே நமது வாசகர்களுக்கு தருகிறோம்.
RSS ன் அடிமை பாசிச மதவெறி பிடித்த பாஜகவைச் சேர்ந்த சங்கியான அமித்ஷா என்ற இவன் யார்?

2010 -இல் போலி என்கவுண்டர் துப்பாக்கிச்சூடு வழக்கில்,முக்கியக் குற்றவாளி இவர். அதனால், குஜராத்தில் தன்னுடைய உள்துறை அமைச்சர் பதவியை இழந்தவர்.
காவல்துறை தேடுதலில் இருந்து தப்பிக்க, மாறு வேடத்தில் 20 நாள்கள் தலைமறைவாக இருந்தவர்.
போலித் துப்பாக்கிச்சூடு வழக்கின் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்பதற்காக, நீதிமன்ற உத்தரவின் பேரில், குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.

துளசி பிரஜாபதி என்பவரின் போலி என்கவுன்டர் கொலை வழக்கிலும், குற்றவாளியாக சி பி ஐ – யால் குற்றப்பத்திரிகை இவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.
குஜராத்தை விட்டு வெளியேறி, உத்திரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, முசாபர் நகர் கலவரத்தை நடத்திய புகாருக்கு ஆளான சங்கி இவர்.
சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பையும், ஆத்திரத்தையும் தூண்டிய பேச்சால், உத்திரப் பிரதேச தேர்தல் ஆணையம், இவனது பரப்புரைக்குத் தடை விதித்தது . 2002 ல் குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது, ஒரு பெண்ணை உளவு பார்த்த வழக்கிலும் தொடர்புடையவர்.
)
அதே ஆண்டில் நடந்த கலவரத்தில் 3000 இஸ்லாமியர் படுகொலைக்கு முதல்வர் மோடியுடன் இவரும் காரணமானவர், என்று விமர்சித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணத்திற்குக் காரணமானவர். நீதிமன்றத்தால் “தடிபார்” (ரௌடி) என விமர்சிக்கப்பட்டவர்.
உலகின் பிரபலமான ஊடகவியலாளர் ரானா அயூப் சொன்ன வார்த்தை முற்றிலும் பொருந்தும், மோடிக்காக எதையும் தாக்கும் வேட்டை நாய் அண்ணல் அம்பேத்கர் பெயரையே உச்சரிக்க அருகதையற்றவர் சங்கி அமித்ஷாவே அமைச்சர் பதவியை ராஜினாமாசெய். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
