chennireporters.com

இரவு நேர ஜெபத்தில் பாலியல் சேட்டை செய்யும் கஞ்சா பாதிரியார்.

இரவு நேர ஜெபத்தில் பாலியல் சேட்டையில் செய்யும் கஞ்சா பாதிரியார்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருவள்ளூவர் தெருவை சேர்ந்தவர் பெந்த கோஸ்த் பாதிரியார் ராஜன் இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். குடித்துவிட்டு போதையில் இருக்கும் இவர் சாலையில் வருவோரை போவோரை வழிமடக்கி அசிங்கமாக பேசுவாராம்.

இவர் சென்னை புறநகர் சுற்றியுள்ள பகுதிகளில் ஊழியம் செய்து வருவார் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார்.  இயேசுவின் பெயர் சொல்லி வீடு வீடாக சென்று ஜெபம் செய்து அவர்கள் தரும் பணத்தில் டாஸ்மாக் கடையில் மது குடிப்பதையே வேலையாக வைத்திருப்பவர்.

அது தவிர இவர் ஹான்ஸ் மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் திருச்சி அடுத்த பெரம்பலூர் பகுதியில் ஒரு சபை அமைத்து ஊழியம் செய்து வந்தாராம் அங்கு சில பெண்களிடம் ஆல் நைட் பிரேயர் ஜெபத்தில் அத்துமீறி பாலியல் பலாக்கரத்தில் ஈடுபட்டதாக கூறி இவரை அங்கிருந்து அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது.

இவர் தற்போது ஆவடி ,திருமுல்லைவாயல், அம்பத்தூர் காட்டூர் ஆரிக்கம்பேடு, பல்லாவரம் தாம்பரம் போன்ற பகுதிகளில் ஜெபம் செய்து வருகிறார்.  வீட்டில்  தனியாக இருக்கும் பெண்களிடம் போனில் ஜெபம் செய்வதாக கூறி ஆபாசமாக பேசுவாராம் இவர் தற்போது திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

அந்த பள்ளியிலும் வேனில் வரும் பெண் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் ஆபாசம் கலந்த வார்த்தைகளில் பேசுவது மட்டும் இல்லாமல் ஆபாச வீடியோக்களை தனது செல்போன்களில் பார்ப்பதாக கூறுகின்றனர் அவருடன் பணியாற்றும் ஊழியர்கள்.

போலி பாதிரியார் ராஜன் திருமுல்லைவாயிலில் குடித்துவிட்டு ரகளை செய்து வருவதை வாடிக்கையாக கொண்டவர்.

ஆரிக்கம்பேடு பகுதியில் உள்ள காட்டூர் என்ற கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் தான் பெரும்பாலும் குடித்துவிட்டு கஞ்சா அடித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள் காட்டூர் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள்.

அங்கு போதை தலைக்கு ஏறியதும்  குடிக்க வருபவர்களிடம் ஓசி குடி கேட்டு கெஞ்சி சண்டை போடுவாராம் அங்கு சென்று விசாரித்தால் இவரைப்பற்றி கதை கதையாக சொல்லுகிறார்கள் அந்த பாரில் வேலை செய்யும் ஊழியர்கள்.

போலி பாதிரியார் ராஜனுக்கு போதை தலைக்கேறியதும் பிரதமர் மோடி , அமித்ஷா,  அண்ணாமலை,  எச்.ராஜா போன்ற அனைவரையும் அசிங்கமான வார்த்தைகளில் நடுரோட்டில் நின்று ஜெபம் செய்வதை போலவே திட்டுவராம்.  திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள பாஜகவை சேர்ந்த ஒருவர் கூட ஆண்மை உள்ளவர்கள் இல்லை என்பதை அடித்து சொல்லுகிறார் இந்த போலி பாதிரியார் ராஜன் இது போன்ற போலி பாதியார்களை தமிழக அரசு கலை எடுத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இது போன்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என்கின்றனர் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரை வழிமடக்கி காலை 9 மணிக்கு நேற்று இரவு அடித்த சரக்கின் போதையிலும் காலையில் போட்ட கஞ்சாவின் போதையிலும் வாய் நிறைய வைத்திருந்த ஆன்ஸின் எச்சிலை துப்பி மேற்படி பற்றிய அசிங்கமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார் இது தொடர்பாக அவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் வழக்கம்போல காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நடத்துவார்கள் நடத்துவார்கள் நடத்திக் கொண்டே இருப்பார்கள் கடைசியில் குற்றவாளி மனநிலை சரியில்லாதவர் என்று புகாரை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள்.

 

 

இதையும் படிங்க.!