chennireporters.com

எழுத்தாளர் துரை குணா எழுத்தில் உருவாகும் புதிய திரைப்படம்.

பி கே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரிக்கும் படம் “அம்புநாடு ஒம்பது குப்பம்”

சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ,ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “ஊரார் வரைந்த ஓவியம்” என்கிற குறு நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படத்தில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, புதுமுகங்கள் விக்ரம், சுருதி முருகதாஸ் , பிரபு மாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மூலக்கதை: துரை குணா, இயக்கம்:ஜி.ராஜாஜி, ஒளிப்பதிவு:ஓ.மகேஷ், இசை: அந்தோணிதாசன்-ஜேம்ஸ் வசந்தன் ,எடிட்டிங்-பன்னீர்செல்வம், நடனம் :ராதிகா, பாடியவர்கள்: பிரதீப்குமார்-அந்தோணிதாசன்.

புதுக்கோட்டையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இயக்குனர் வெற்றிமாறன் 10/4/2023 நேற்று வெளியிட்டார்,

இயக்குனர் வெற்றிமாறனுடன், எழுத்தாளர் துரை குணா இயக்குனர் ராஜாஜி,தயாரிப்பாளர் பூபதி கார்த்திகேயன் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க.!