chennireporters.com

கோடைகாலத்தில் கோமியம் கலந்த குடிநீரை குடியுங்கள் அண்ணாமலை கடிதம்.

கோடை காலத்தில் பாஜக தொண்டர்கள் நோய்களைத் தீர்க்கும் கோமியத்துடன் மோர் மற்றும் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க தயாராவோம் எந்த ஒரு நிலையிலும் மக்களின் பணி செய்வதை லட்சியமாக கொண்டு செயல்படுபவர்கள் பாஜக தொண்டர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

கோடை வெயிலில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள வெயில் காலம் இது மக்களின் வெப்ப சூட்டை போக்க பலரும் நீர்மோர் பந்தல்களை திறப்பார்கள்.  ஆனால் நாம் அப்படி ஏனோ தானோ என இருக்க முடியாது மக்களின் சூட்டை போக்கும் விதத்திலும் அதே சமயம் உடல் பிணைகளை நீக்கும் விதத்திலும் மோருடன் கோமிய பானத்தையும் கூடவே ஸ்ட்ராபெரி, மாங்கோ, நன்னாரிகளை நன்னாரி வாசனைகளிலும் வழங்கி மக்கள் மனம் கவர வேண்டும் என்றும் தேசப்பணியில் அண்ணாமலை என்கிற கடிதத்தை கடந்த 27ஆம் தேதி அன்று அண்ணாமலை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

கோமியம் கலந்த நீர் மோரை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வெளியிட்ட கடிதம் குறித்து பாஜக தலைமை அலுவலகத்திற்கு நாம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம் . அந்த கடிதம் போலியானது என்று சொன்னார்கள் ஆனால் அந்த கடிதம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை எந்தவிதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.  இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு அது போலியான கடிதம் என்று சொல்கிறார்கள்

இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதும் அண்ணாமலைக்கு ஆட்டு மூளையா அல்லது மாட்டு முல்லையா என்று கமெண்ட்கள் அதிக அளவில் பதிலாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதையும் படிங்க.!