chennireporters.com

இலங்கை தமிழ் எம்.பி.தாக்குதல் பழநெடுமாறன் கண்டனம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது வீடு புகுந்து தாக்குதல்! சிங்கள காவல்துறையின் அட்டூழியத்தைக் கண்டித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவர்களின் வீட்டிற்குள் சிங்கள காவல்துறை அதிகாரிகள் இருவர் புகுந்து துப்பாக்கி முனையில் அவரை மிரட்டியும், அவர்மீது தாக்குதல் நடத்தியும் புரிந்த அட்டூழியம் உலகத் தமிழர்களை அதிர வைத்திருக்கிறது.

இராசபக்சேயின் ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எதிரான போக்கினை இரணிலின் ஆட்சியும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு தமிழருக்கே இந்த நிலை என்று சொன்னால், சிங்கள இராணுவமும், காவல்துறையும் குவிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டிருப்பதையும், கைது  செய்யப்பட்டிருப்பதையும் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க.!