chennireporters.com

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சங்கத்தில் சுமார் 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் . இந்த சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் .இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சத்தியபால் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “விதிகளை மீறி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய தகுதிகளையும் அறிவித்தது. அதன்படி 5 ஆண்டுகளில் 200 வழக்குகள் நடத்தியவர்கள்தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் என்பது உள்ளிட்ட விதிகளை உருவாக்கி உத்தரவிட்டது.

 

இந்த நிலையில் இந்த உத்தரவை சீராய்வு செய்ய கோரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்து நீதிபதிகள் மகாதேவன் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், ஏற்கெனவே இருந்த சங்கங்களின் சட்ட விதிகள் படியே தேர்தலை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

இதையும் படிங்க.!