chennireporters.com

தமிழக முதல்வரே இரக்கம் காட்டுங்கள்.

மரணத்தின் பிடியில் இருக்கும் தரங்கம் பாடி இளைஞன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

என் பெயர் சுமன் வயது இருபத்தி எட்டு உடலில் உள்ள பிரச்சனை நரம்புத் தளர்ச்சி என்னால் சின்ன சின்ன வேலை கூட செய்ய முடியாது, ஏனென்றால் கை கால் நடுக்கம் எங்களுக்கு உதவி பண்ண யாரும் கிடையாது.

எனக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான். அவங்க விவசா வேலைக்கு போகிறார் அவருக்கு தினம் வருமானம் 200 ரூபாய் தான். அந்த பணத்தை வைத்து தான் எங்கள் குடும்பத்தை பார்த்துட்டு வராங்க. அவங்க இல்லை என்றால் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

என் நிலைமையை ஒருவர் கூட புரிந்து கொள்ளவில்லை. நான் எதுவும் பணம் காசு யாரிடமும் கேட்கவில்லை. என்னை அழைத்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் எனக்கு ஒரு சான்றிதழ் வாங்கி கொடுங்கள் என்று தான் கேட்கிறேன். அது கூட என்னிடம் ஆற்றல் இல்லை நீங்கள் நிறைய பேர் ஆதரவற்ற மனிதர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.

அதை நான் தப்புன்னு சொல்லவில்லை. நான் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கஷ்டப்பட்டு வருகிறேன். நான் யாருடைய ஆதரவும் இல்லாத மனிதனாக அதிக அளவில் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் என்று தான் உங்களை கேட்கிறேன். என்னோட நிலைமை யாருக்குமே புரிய மாட்டேங்குது. என் மேல் கருணை காட்டுவதற்கு கடவுளும் இல்லை.

மனிதர்களும் இல்லை எனக்கு வந்த கஷ்டம் போல் யாருக்குமே வரக்கூடாது. எனக்கு உயிரோடு இருக்கவே பிடிக்கல நான் ஒரு நடமாட முடியாத ஒரு நடை பிணம். என்னால் நூறு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது உங்களின் இரு பாதங்களை வணங்கி கேட்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியவில்லை.

இரு கரம் கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரண்டு கைகளும் உன்னை கடவுளாக வணங்கும் என்று ஒரு இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது இது தான் நமக்கு தோன்றுகிறது.

உயிர் இல்லாத உடலை புதைத்து வைப்பது தான் கல்லறை என்றால் உயிர் இருந்தும் மற்றவர்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத ஒவ்வொரு இதயமும் கல்லறை தான்.

முகவரி
வீட்டில் என் 1/5
அம்பேத்கர் தெரு
நல்லடை
தரங்கம்பாடி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
609306.

இதையும் படிங்க.!