chennireporters.com

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார்.

வணக்கம் நண்பர்களே, இன்று 10,30 மணி அளவில் பெருநகர சென்னை மாநகரகாவல்துறை அவர்களிடம் கீழ்கண்ட புகார் மனுவை தாக்கல் செய்கின்றேன் : புகார் மனு நகல் இணைத்து உள்ளேன்.

 

புகாரின் சுருக்கம் என்னவென்றால் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று தீய நோக்கோடு ஊடகங்களில் தேவையற்ற அவதூறுகளையும் பொய் பிம்பத்தையும், உண்மையில்லாத சம்பவத்தை மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் வெளியிட்டு வருகின்றார்.

மேலும், பொதுமக்களிடைய அச்சத்தையும் பயத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைத்து வருகின்றார். பா.ஜ.க தலைவரும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரியான அண்ணாமலை “தேசிய பாதுகாப்பு சட்டபிரிவின் கீழ் நடவடிக்கை மற்றும் இந்தியச் சட்டப் பிரிவு 469-ன் கீழ் நடவடிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் 66சி, 66டி, 66இ, 67, 67ஏ, 71, 72, ஐபிசி 503, 499, 464, 469, 500, 507, 292, 294 போன்ற குற்றப் பிரிவுகள்” படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று இப்புகார் மனு பணிந்து கேட்டுக்கொள்கின்றேன்.

என்று தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க.!