chennireporters.com

கோவையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டு பறிமுதல்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாகவும், போலி ரூபாய் நோட்டுகளை காட்டி பணம் மோசடி செய்து வருவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் பிரஸ் காலணியில் உள்ள பாலாஜி கார்டன் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில் அட்டை பெட்டியில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களைப்போல தோற்றம்கொண்ட கள்ள நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இந்த நோட்டுகள் 9 பெட்டிகளில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். இது தவிர 2 இரிடியம் கலசம் இருந்தது.

இரிடியம் என கூறி மோசடி செய்யும் கும்பல் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதையும் படிங்க.!