chennireporters.com

தனியார் நிதி நிறுவனங்களை கண்டித்து ஜி.கே வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், விழுப்புரம், திருவள்ளூர், என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆருத்ரா மற்றும் ஐ.எஃப்.எஸ்,கேட் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பல கோடி பணத்தை சுருட்டி கொண்டு நாட்டை விட்டே ஓடி விட்டன.

தமிழக அரசு அவர்களை கண்டுபிடிக்காமல் பொதுமக்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருந்து வருகிறது.

நடுத்தர மக்களின் வாழ்நாள் சேமிப்பை கொள்ளையடித்த கொள்ளை கும்பலை ஏழை நடுத்தர மக்கள் தங்களின் குழந்தையின் கல்விக்காகவும் மகளின் திருமணத்திற்காகவும் சேமித்து வைத்த பணத்தை எல்லாம் கொள்ளையடித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இழந்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும்.

மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் கும்பலையும் உள்ளூர் முகவர்களையும் மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரித்து துரித நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்து பொதுமக்கள் பணத்தை ஏமாற்றிய சென்றவர்களிடமிருந்து ஏழை மக்களின் பணத்தை மீட்டு தர வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வரும் 24ஆம் தேதி காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்குகிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் கலந்து கொண்டே கண்டன உரை ஆற்றுகிறார்.

இந்த மாபெரும் கூட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும் என்று காஞ்சிபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அழைக்கின்றனர். இந்த கூட்டத்திற்கு டாக்டர் இ எஸ்.எஸ்.ராமன் விடியல் சேகர் என கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதையும் படிங்க.!