chennireporters.com

கோடிகளில் புரண்ட கேடி பெண் இன்ஸ்பெக்டர் பதவி பறிப்பு.

காக்கி சட்டை போட்டுக்கொண்டு பண வெறி பிடித்து மிருகமாய் அலைந்த பெண்ணின் இன்ஸ்பெக்டரை பதவிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்.

சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராணி இவரை போலீஸ் வட்டாரத்தில் ஜில்ஜில் ராணி என்றுதான் அழைப்பார்களாம்.

இவரது எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்து மற்றும் இழப்பீடு வழக்குகளை இவருக்கு வேண்டப்பட்ட வக்கீல்களுக்கு வழக்கை கொடுப்பாராம் . அப்படி இழப்பீடு மற்றும் விபத்து வழக்குகளை முடித்து தரும் வழக்கறிஞர்களிடம் ஒரு பெரிய தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொள்வாராம் இன்னும் பல்வேறு முறை கேட்டு புகார்களில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள் அவருடன் பணியாற்றிய காவலர்கள்.

அதாவது விபத்து ஏற்பட்டு காவல் நிலையம் எடுத்து வரும் கார், மோட்டார் பைக் போன்ற வாகனங்களில் இருந்து பொருட்கள் களவாடப்படுவது, பேட்டரி, டயர்கள் திருடப்படுவது சில நேரங்களில் வண்டியையே விற்று விடுவது என எல்லா வேலைகளையும் செய்து வந்தாராம் இந்த ஜில்ஜில் ராணி.

இது தொடர்பாக பல புகார்கள் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்  பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் துனை ஆணையர் ஜேம்ஸ் தங்கையா ஜில்ஜில் ராணி இடம் விசாரணை நடத்தினார்.  அதில் ஜில்ஜின் ராணி பல்வேறு முறைகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

 

இதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இன்ஸ்பெக்டர் ராணியை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.  இந்த நிலையில் தாம்பரம் கூடுதல் கமிஷனர் காமினி கடந்த ஏழு மாதங்களாக ஜில்ஜில் ராணி பற்றி மீண்டும் ஒரு தனி விசாரணை நடத்தினார்.

 

அதில் பல்வேறு  முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.  இது தொடர்பாக கமிஷனர் அமல்ராஜிடம் அறிக்கை சமர்ப்பித்தார் காமினி.  அறிக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமிஷனர் அமல்ராஜ். உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜில்ஜில் ராணியை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இந்த உத்தரவு போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜில்ஜில் ராணி  விலை உயர்ந்த செல்போன்களை தான் பயன்படுத்த்வராம். அது தவிர சினிமா படங்களில் வருவதைப் போல மிக ஸ்டைலாக ஆடை அணிவாராம் எதற்கெடுத்தாலும் பணம் இல்லாமல் எந்த வேலைகளையும் செய்ய மாட்டாராம் ஜில்ஜில் ராணி அதனால் இவரை A to Z  ராணிய என்றும் சொல்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.  இவர் செய்யாத ஒரே ஒரு வேலை ……………. மட்டும் தான் என்கிறார்கள். ஜில்ஜில் ராணியின் சொத்து மதிப்பு சுமார் ரூ, 10 கோடியை தாண்டும் என்கிறார்கள். ராணிக்கு பல உயர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கிறதாம் அதனால் மீண்டும் வருவேன் என்று சொல்கிறாராம் ராணி…..

இதையும் படிங்க.!