chennireporters.com

அமைச்சர்களை மாற்றி விடுவேன்; ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காட்டம்.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, 2024ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, கட்சியை பலப்படுத்தும் பணியில் ஜெகன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் காட்டமாக  பேசியிருக்கிறார். அமைச்சர்கள் சிலர் தவறு செய்கிறார்கள்.

தங்களை திருத்திக்கொள்ளவில்லை என்றால் அதிரடியாக பல மாற்றங்கள் நடக்கும். இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்பேன் மாறவில்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்.

கட்சி, ஆட்சியை பலப்படுத்த வேண்டிய அமைச்சர்கள், துறை ரீதியாக 6 மாதங்களாக பிடிப்பின்றி இருக்கிறார்கள்.   ஒரு பெண் அமைச்சர் உட்பட 4 பேரின் பதவிகள் பறிக்கப்படும்.

தேர்தலுக்கு முன்கூட்டியே கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும். தீபாவளிக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். இவ்வாறு, அவர் பேசியிருக்கிறார்.

முதல்வர் ஜெகன் மோகனின் இந்த பேச்சால் ஆந்திர அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!