Jane GoodallJane Goodall ( JEAN-MARC BOUJU )

உலகம் முழுவதும் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காப்பின் சின்னமாக திகழ்ந்த ஜேன் கூடால், 2025 அக்டோபர் 1ஆம் தேதி 91 வயதில் மரணமடைந்தார். “வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குச் சமமான உணர்வுகள் உள்ளன” என்ற கருத்தை உலகிற்கு உணர்த்திய இவர், சிம்பன்சி ஆய்வுகள் மூலம் அறிவியல் உலகையே மாற்றியவர்.

1934 ஏப்ரல் 3ஆம் தேதி லண்டனில் பிறந்த ஜேன், சிறுவயதிலிருந்தே இயற்கை, விலங்குகள் குறித்த அக்கறையால் பிரபலமானவர். 1960ஆம் ஆண்டு தான்சானியாவின் கோம்பி தேசிய பூங்காவில் சிம்பன்சிக்களின் நடத்தையை ஆய்வு செய்யத் தொடங்கினார்.Jane Goodall

சிம்பன்சிக்கள் கருவிகளை உபயோகிப்பதும், தனித்தன்மை கொண்ட உணர்ச்சிகளையும் சமூக உறவுகளை வெளிப்படுத்துவதையும் கண்டறிந்தார். மனிதர்களுக்கே உரியதாக கருதப்பட்ட பல செயல்கள் விலங்குகளுக்கும் இருப்பதை அவர் நிரூபித்தது அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது.

1977ஆம் ஆண்டு, ஜேன் “ஜேன் கூடால் இன்ஸ்டிடியூட்” என்ற அமைப்பை தொடங்கி, சிம்பன்சிக்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களை காப்பாற்றும் பணிகளை முன்னெடுத்தார். மேலும், 1991ஆம் ஆண்டு “ரூட்ஸ் அண்ட் ஷூட்ஸ்” என்ற திட்டத்தை ஆரம்பித்து, இளம் தலைமுறையை இயற்கை பாதுகாப்பில் ஈடுபடுத்தினார். இன்று அந்த இயக்கம் உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

Jane Goodall

அவரது பணிக்காக பல விருதுகள் வழங்கப்பட்டன. 1990ஆம் ஆண்டு ஜப்பானின் “கியோட்டோ பரிசு”, 2002இல் ஐ.நா.வின் “அமைதி தூதர்” பட்டம், 2003இல் இங்கிலாந்தின் “டேம்” பட்டம், 2021இல் “டெம்பிள்டன் பரிசு” மற்றும் 2025இல் அமெரிக்காவின் உயரிய குடியரசுத் தலைவர் விருதான “பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்” ஆகியவை அவருக்கு கிடைத்தன.

Jane Goodall

இரு திருமணங்களும், ஒரே மகனும் கொண்டிருந்த இவரின் வாழ்க்கை சவால்களாலும் சாதனைகளாலும் நிறைந்தது. பட்டப்படிப்பு இல்லாமலேயே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். உலகம் முழுவதும் உரைகள் நிகழ்த்தி, “நம்பிக்கை மற்றும் செயல்தான் மாற்றத்தை உருவாக்கும்” என்ற நம்பிக்கையை விதைத்தார்.

Jane Goodall dies: Chimpanzee expert and environmental advocate's final message | Vox

ஜேன் கூடாலின் மறைவு உலகுக்குப் பெரும் இழப்பாக இருந்தாலும், அவரது பாரம்பரியம் என்றும் உயிர்ப்புடன் இருக்கும். அவர் விட்டு சென்ற சிந்தனை – “மனிதன், விலங்கு, இயற்கை அனைத்தும் ஒரே குடும்பம்” – என்ற கோட்பாட்டின் படி உலகைத் தொடர்ந்து வழிநடத்தும்.