chennireporters.com

பதவி உயர்வில் ஓ. பி. சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தல்.

பதவி உயர்வில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக அரசியல் சாசன பிரிவு 16ல் திருத்தம் கொண்டு வரக்கோரி தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் ஒன்றிய சட்டத்துறை அமைச்சருக்கு கடிதம்.

பி.வில்சன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், உண்மையான சமூக நீதியை நிலை நாட்டில் வகையில், நிர்வாகத்தில் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காகவும், பதவி உயர்வுகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு சீனியாரிட்டியுடன் கூடிய இடஒதுக்கீடுகள் வழங்குவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஏனெனில், ஏற்கனவே அரசியலமைப்பு பிரிவு 16 (4A) மற்றும் 16 (4B) ஆகியவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது.

ஆனால் ஓ.பி.சி பிரிவினருக்கு அவ்வாறு இல்லை, இதனால் சமூகத்தில் பின் தங்கியுள்ள இந்த பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, ஓ.பி.சி பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு பிரிவு16ல் திருத்தம் கொண்டு வரவேண்டும் என பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க.!