chennireporters.com

“ஓங்கும் கை” மகுடம் சூடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி உதயசூரியன் வெளிச்சத்தில் பளிச்சன தெரிகிறது.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏ திருமகன் ஈ.வே.ரா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது அதன்படி இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது .

 

கடந்த ஒரு மாதமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். அதில் அந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வேலைகளையும் இந்த அரசு சிறப்பாக செய்து தரும் என்றும் ஏற்கனவே பணியாற்றியவர் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார் என்றும் பேசி வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

முதலமைச்சரும் நேரடியாக களத்திற்கு சென்று பிரச்சாரம் செய்தார் அதனை தவிர்த்து திமுக எம்.பி கனிமொழி , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்களும் களத்திற்குச் சென்று பிரச்சாரம் செய்து வந்தனர்.

 

இதன் பலனாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி சூரியன் வெளிச்சத்தில் பிரகாசமாக இருப்பதாக சொல்லுகிறார்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை சார்ந்த காங்கிரஸ் பிரதிநிதிகள், அங்கு உள்ள மக்கள் தொகையில் கொங்கு வேளாளர் 40 சதவீதமும், செங்குந்த முதலியார் 30 சதவீதமும், நாடார், தேவர், பட்டியல் இன மக்கள், முஸ்லிம் மற்றும் பிற சமூகத்தினர் 30 சதவீதம் உள்ளனர்.  இதில் திமுக ஆதரவாளர்கள் அதிகம் இருக்கின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அந்த மண்ணின் மைந்தனாகவும் சிறப்பாக தனது பணிகளை செய்து வரும் இ.வி.கே.எஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் மிக சிறப்பானது.  அது தவிர மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்த பொழுது ஈரோடு தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து முடித்துள்ளார். அதனால் அவரின் வெற்றி பெறுவது மிக சுலபம் என்கின்றனர்.

மொத்த வாக்காளர்கள் 2,28,402 . ஆன் வாக்காளர்கள் 1,11,713.
பெண் வாக்காளர்கள் 1,16,140 இதர வாக்காளர்கள் 549.

 

இதையும் படிங்க.!