chennireporters.com

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு  காணொளி  வாயிலாக வாழ்த்து  கூறி அறிக்கை வெளிட்டுள்ளார்.

என் பேரன்பிற்குரிய 10 ,11 மற்றும் 12 ம் பொதுத் தேர்வு எழுதி இருக்கின்ற மாணவ மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.  என்ன பரிட்சை கவலையில் இருக்கிறீர்களா?  ஒரு கவலையும் வேண்டாம் எந்த பயமும் வேண்டாம் இது இன்னொரு பரீட்சை அவ்வளவுதான்.

அப்படிதான் இதை நீங்கள் அணுக வேண்டும் எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்திலிருந்து தான் வரப்போகிறது.  அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள் உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும் மன உறுதியும் தான் அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது இல்லை உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு போவது, உயர்த்தி விடுவது அதனால் மீண்டும் சொல்கிறேன்எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் தேர்வை பார்த்து பயம் வேண்டாம்.

பாடங்களை ஆழ்ந்து படியுங்கள் புரிந்து படியுங்கள் விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் போல நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் முதல்வராக மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் ஒருவராக .

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த முதல்வர்களும்  பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து கூறியது இல்லை இதுவே முதல் முறை .

எனவே இந்த வாழ்த்து செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இது தற்போது மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாகவும் மன உறுதியையும் அளிக்கும் வகையில் இருக்கிறது என்கிறார்கள் மாணவர்களும் பெற்றோர்களும்.

முதலமைச்சரின் இந்த வாழ்த்து  மாணவர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியை தருகிறது என்று சொல்லலாம்

இதையும் படிங்க.!