chennireporters.com

போதை பொருள் நடமாட்டம் முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.

இளம் வயது மாணவர்கள் எட்டு பேர் வட்டமாக உட்கார்ந்து கஞ்சா புதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அதில் ஒவ்வொருவர் கைகளிலும் மூன்று நான்கு பாக்கெட் கஞ்சா இருப்பதை காட்டுகின்றனர் அது தவிர பேப்பரில் கஞ்சாவை கொட்டி சிகரட்டில் போடும் வீடியோவும் காட்சிகள் அதில் இடம்
பெற்றுள்ளன.

தமிழகத்தில் இவ்வளவு சின்ன பிள்ளைகளுக்குக் கூட “கஞ்சா” சர்வ சாதாரணமாக கிடைப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. தமிழக காவல்துறை இன்னும் கூடுதலாக போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ராணிப்பேட்டை செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கஞ்சா புழுக்கம் அதிகரித்து வருகிறது.

 

இந்த கஞ்சா புழுக்கத்தால் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் போலீஸ் சோதனை சாவடியில் போதை மாத்திரைகள் கஞ்சா கடத்தி வந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் என்று பெயர் போலீஸ் அதிகாரிகள் அழைத்து கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும் ஆய்வு கூட்டம் நடத்தினார் அதில் பல முக்கிய உத்தரவுகளை போலீஸ அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க.!