கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஐந்து முனைப் போட்டி நிலவியது திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி, விஜய், நாம் தமிழர் சீமான், சசிகலா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஆகியோர் தனித்துப் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பட்டிகள் பத்திரமாக 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது வாக்குப்பெட்டிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் விஜய் கட்சி 105 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. அதிமுக 54 இடங்களிலும், திமுக 73 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தற்போது மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.அதில் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போது அவர்கள் 108 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். சிறிய மாற்றங்களுடன் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது நிலவரப்படி அதிமுக 53 இடங்களிலும், திமுக 73 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சிகள் இரண்டு இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் இரண்டு இடங்களிலும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.இன்னும் நிறைய சுற்றுகள் எண்ணப்பட உள்ள நிலையில் திமுகவின் முன்னணி நிலவரம் அதிகமாக கூடும் என்கின்றனர் சில தேர்தல் பார்வையாளர்கள் சிலர் விஜய் தனித்து மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பார் என்கிறார்கள்.
திமுக தனது வீழ்ச்சிக்கு குடும்ப அரசியலும் தனது மருமகன் சபரீஷனுமே காரணம் என்கின்றனர் சில மூத்த அரசியல் பார்வையாளர்கள். பழமையான அரசியல்வாதிகளுக்கு கட்சியிலிருந்து விலக்கு அளித்து புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்திருந்தால் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
அதேபோல அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு சென்று சேரவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும் இன்று மாலை அனைத்து சுற்றுகளும் எண்ணப்பட்டு யார் முன்னிலை வகிக்கிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்கிற விவரம் தெரிய வரும் தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இவர்களுக்கே பெரும்பாலும் வெற்றி வாகை சூடும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த அதிசயம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயையே சாரும்.
