chennireporters.com

மோதிக்கொள்ளும் விஐபிகள்.அதிகார பலம் யாருக்கு? அமைச்சருக்கா அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கா?

மோதிக் கொள்ளும் விஐபிகள் அதிகார பலம் யாருக்கு அமைச்சருக்கா அல்லது ஐஏஎஸ் அதிகாரிக்க என்கிற போட்டியில் மூத்த அமைச்சரும் ஐஏஎஸ் அதிகாரியும் மோதிக் கொள்கிறார்கள் என்கிற தகவல் கோட்டை வட்டாரத்தில் பலமாய்  பேசப்பட்டு வருகிறது முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

’நான் அமைச்சரா இல்லை அமுதா ஐ.ஏ.எஸ் அமைச்சரா?’ டென்ஷனில் ஐ.பெரியசாமி
’ என்னை மாற்றுங்கள் இல்லையென்றால் என் துறையில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றுங்கள்’ என முதல்வரின் செயலர் சண்முகத்திடம்  அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக சொல்கிறார்கள் உ.பிக்கள்.

கட்சியிலும் அமைச்சரவையிலும் சீனியரான தன்னை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் மதிப்பதில்லை, துறை சார்ந்த செயல்பாடுகளை தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவருவதில்லை என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கோபத்தில் இருப்பதாக  சொல்கிறார்கள் அதிகாரிகள்.

 

 

ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா ஐ.ஏ.எஸ், துறையை முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதாகவும், ஊழியர்கள் பணியிடமாற்றம் தொடங்கி பணிகள் வரை எந்த தகவலையும் அமைச்சருக்கு முறையாக அவர் சொல்வதில்லை என்றும் ஐ.பி. ஆதரவாளர்கள் புலம்பத் தொடங்கி உள்ளனர். அந்த புலம்பல் நீடித்து, தற்போது அமைச்சருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்க்கும் முட்டல் மோதல் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினிடம் நற்பெயரை எடுக்க வேண்டும் என்பதற்காக, ஊரக வளர்ச்சித் துறையில் திட்டமிட்டு, ஏதேனும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதனை உதயநிதியை வைத்து நடத்துவதை அமுதா ஐ.ஏ.எஸ் வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் அவரை புகழ்வதையும் அறிவுறுத்தல் வழங்குவதையுமே தன்னுடைய முழு நேர பணியாக அமுதா வைத்திருப்பதாகாவும் அமைச்சர் ஐ.பி ஆதரவாளர்கள் கோட்டை வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

 

சமீபத்தில் கூட, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டமான HCL-ஐ செயல்படுத்த அரசு மற்றும் HCL அறக்கட்டளை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஆனால், இந்த நிகழ்ச்சி பற்றி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் உதயநிதி ஸ்டாலினை அழைத்து அவர் தலைமையில் அமுதா ஐ.ஏ.எஸ் திட்டத்தை செயல்படுத்த கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையறிந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ’ஒன்று என்னை மாற்றுங்கள் ; இல்லையென்றால் என் துறையில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றுங்கள்’ என முதல்வரின் செயலர் -3 சண்முகத்திடம் சொல்லி, கோபித்துக்கொண்டு ஊருக்கு கிளம்பி சென்று விட்டதாகவும் தலைமைச் செயலகத்தில் இருந்து தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

அரசின் திட்டங்கள் குறித்து அமைச்சருக்கு புரிதல் இல்லாத்தால்  வேறு வழியின்றி அமுதா ஐ.ஏ.எஸ்-சே அதனை எடுத்து செயல்படுத்த வேண்டியிருக்கிறது என்கின்றனர் அமுதாவின் ஆதரவாளர்கள்..

இருந்தாலும் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் ஆகியுள்ளவர்களை அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மதித்து செயல்பட வேண்டும் என்ற குரல்களும் தலைமைச் செயலகத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க.!