chennireporters.com

தமிழகத்தில் பிரஸ் கவுன்சில் அமைக்க நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை எதிர்க்கும் பத்திரிகையாளர் சங்கங்கள்.

தமிழகத்தில் பிரஸ் கவுன்சில் ஏற்படுத்த அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி பத்திரிகையாளர்களை களையெடுக்க ஏதுவாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற ஒரு அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் பணியாற்றிய
போது தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த சேகர் ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது சேகர் ராம் போலி பத்திரிகையாளர் என பொன்மாணிக்கவேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது இதையடுத்து தமிழகத்தில் போலி பத்திரிகையாளர்களை “களை” எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை விரிவுபடுத்தியது.

இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் வேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து உத்தரவிட்டு உள்ளது.

அதில் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்தப் பத்திரிகையாளர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும்.

பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அங்கீகாரத்தை பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

சாதி மத மொழி அடிப்படையில் பத்திரிகையாளர்கள் பத்திரிகையாளர் சங்கங்கள் செயல்பட அனுமதிக்க கூடாது தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர நேரடியாக வழங்கக்கூடாது.

போலி பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்க கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் அங்கீகார அடையாள அட்டை வழங்கும் விதிகளில் மூன்று மாதங்களில் தமிழ்நாடு அரசு உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இந்த உத்தரவுகளை அமல் படுத்தியது தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

தவறினால் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

இந்த தீர்ப்பு தமிழகத்திலுள்ள பல பத்திரிகையாளர்அமைப்புகள் தங்களுக்கு எதிராக உள்ளதாகவும் பத்திரிகையாளர் சங்கங்களை உருவாக்க தடையாக இருக்கும் என்றும் பத்திரிகையாளர் அமைப்புக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், ஜானலிஸ்ட் புரடக்ஷன் அமைப்பு, பெண் பத்திரிகையாளர் அமைப்பு மற்றும் பல அமைப்பினர் உடனடியாக அரசு இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க.!