chennireporters.com

பட்டரில் செய்த அழகு சிலையா கீர்த்தி சுரேஷ்.

மலையாள திரைப்பட உலகில் சிறந்த தயாரிப்பாளராக விளங்கும் சுரேஷ்குமார் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள்தான் கீர்த்தி சுரேஷ் இவர் தன் அப்பா தயாரிக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

அதன் பின் வளர்ந்த பிறகு விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷின் தரத்தை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் “ரெமோ” படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார் கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தி வருகிறார்.

கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் பட்டத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்
கீர்த்தி சுரேஷ் இவர் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் கீர்த்தி சுரேஷ் இதுவரை குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார்.

ஆனால் சமீபத்தில் வெளியான ரேஞ் “டி” படத்தில் கொஞ்சம் கவர்ச்சி அதிகம் காட்டியிருக்கிறார் இந்நிலையில் கடற்கரையில் இவரது செல்ல நாய்க்குட்டி உடன் அழகான போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை பட்டரில் செய்த சிலை
என்கிறார்கள்.

இதையும் படிங்க.!