chennireporters.com

விடுதலை விடுதலை விடுதலை…….

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் தீர்ப்பை அளித்துள்ளது.எந்த தவறும் செய்யாத இன விடுதலைக்காக போராடிய பெரிய சகாப்தம் ஆகவே பார்க்கப்படுகிறது பேரறிவாளனின் 30 ஆண்டு கால சிறைவாழ்க்கை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை வைத்து 142-வது பிரிவைச் பயன்படுத்தி பேரறிவாளனினை விடுதலை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர். கவாய் ஆகிய மூன்று பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை 2004ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இவர்களின் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது.நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016 ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.

தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார் தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் பேரறிவாளவன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களாக வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி விசாரணை முடிந்தது.தமிழ்நாடு அரசின் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் இந்த வழக்கில் தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார்.

சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது .அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர் அவர் அதில் முடிவு எடுக்க வேண்டும். மாறாக 3 வருடமாக ஒரு முடிவை கிடப்பில் போட கூடாது.

ஆயுள் தண்டனையை விடுதலை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது.இந்த விவகாரத்தில் அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையை அழித்துவிட்டனர்.

கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை, என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது.மத்திய அரசு வைத்த வாதத்தில் பேரறிவாளன் வழக்கில் தண்டனை குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.

ஏற்கனவே அவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு
விட்டது.அவருக்கு ஏற்கனவே ஒரு நீதி சலுகை வழங்கப்பட்டுவிட்டது.இதனால் மீண்டும் அவரின் தண்டனையை குறைக்க கூடாது.இந்த வழக்கு மத்திய புலானய்வு மையம் விசாரித்த வழக்கு.

இதன் காரணமாக அதில் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவே அதிகாரம் உள்ளது.ஆளுநர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு இந்த மனுவை அனுப்பிவிட்டார்.இதில் அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று வாதிட்டது.

பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு.இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கே இது எதிரானது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும்.அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது என்று நீதிபதிகள் கேட்டனர் .

அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை.இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம், என்று கூறியது.

பேரறிவாளன் ஏற்கனவே சிறையில் 30 வருடம் இருந்துவிட்டார்.அவர் அங்கே படித்து பட்டமும் பெற்றுவிட்டார்.அவரின் நடத்தையில் எந்த பிரச்சனையும் இல்லை.

நீங்கள் விடுதலை செய்யும் வரை காத்திருக்காமல் நாங்களே ஏன் விடுதலை செய்ய கூடாது? என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநருக்கும் கடுமையான கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது.

இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்கியதே இல்லை. இது மிகவும் அரிதான தீர்ப்பாகும்.

வரலாற்று சிறப்பு மிக்க நீதிபதிகள் வழங்கிய இந்த‌ தீர்ப்பில் பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் செய்த தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது.

அவரின் விடுதலை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது தவறு.28 மாதங்கள் இந்த வழக்கில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு.அவர் காலதாமதம் செய்தது மிகப்பெரிய தவறு.

இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதையும் படிங்க.!