chennireporters.com

#Maulana Abul Kalam Azad; பிப்-22 இந்தியாவின் முதல் கல்வித் தந்தை மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவு தினம்.

பிப்ரவரி 22 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இந்தியாவின் கல்வித் தந்தை, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் நினைவு நாள்.சவுதியில் பிறந்து, எகிப்தில் பட்டப்படிப்பை முடித்து, இந்திய தாய்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு, பலவருடங்கள் சிறைச்சாலையில் கழித்து, தன்வாழ்க்கையை, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அற்பணிப்பு செய்த தியாகத் தலைவர்களுள் ஒருவர் அபுல் கலாம் ஆஸாத். அபுல் கலாம் ஆசாத் - தமிழ் விக்கிப்பீடியாஇன்று நடக்கும் ஆட்சியாளர்களுக்கு, முஸ்லிம்கள் இந்நாட்டிற்கு என்ன செய்தார்கள் என்பது இது ஒரு சான்று.காந்தி, நேரு போன்ற மிகப்பெரிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
சமய நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர்.National Education Day November 11 Maulana Abul Kalam Azadஇந்திய நாட்டின் முதல் கல்வி அமைச்சர். 1947லிருந்து 1958வரை கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்த டாக்டர் அபுல் கலாம் ஆஸாத் பல சாதனைக்கு சொந்தக்காரர்.

IIT, IMM போன்ற பல பல்கலைக் கழகங்களை உருவாக்கி, விஞ்ஞானியாக, அறிவியலாளராக, டாக்டர்களாக உருவாக்க வைத்த பெருமை மெளலானா அபுல் கலாம் ஆஸாத்தைச் சாரும்.

இதையும் படிங்க.!