chennireporters.com

#new chief justice p.s. kawai; உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பி.எஸ். கவாய்.

75 ஆண்டு கால இந்திய வரலாற்றில்  உச்ச நீதிமன்றத்தின் 2-வது தலித் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த கே. ஜி. பாலகிருஷ்ணனுக்கு பிறகு, இந்திய தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார். தற்போது, தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா, வரும் மே மாதம் 13ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான பி.ஆர். கவாயை அடுத்த தலைமை நீதிபதியாக அவர் பரிந்துரை செய்துள்ளார்

புதிய தலைமை நீதிபதி பி.எஸ். கவாய்.

சுதந்திரத்திற்கு பிறகு, 75 ஆண்டு கால இந்திய வரலாற்றில் 2ஆவது முறையாக நாட்டின் உச்சபட்ச பதவிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய தலைமை நீதிபதி பதவியில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமர உள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த கே. ஜி. பாலகிருஷ்ணனுக்கு பிறகு, இந்திய தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார். தற்போது, தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா, வரும் மே மாதம் 13ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான பி.ஆர். கவாயை அடுத்த தலைமை நீதிபதியாக அவர் பரிந்துரை செய்துள்ளார்.

நீதித்துறையின் உச்சபட்ச பதவி:

இந்திய நீதித்துறையை பொறுத்தவரையில், உச்சபட்ச பதவியாக இந்திய தலைமை நீதிபதி பதவி திகழ்கிறது. நாட்டின் நீதிபதிகளிலேயே முதன்மை நீதிபதியாக உள்ளது தலைமை நீதிபதிதான், உச்ச நீதிமன்றத்தில் எந்த வழக்கு எந்த அமர்வுக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பார். உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் தலைமை நீதிபதிக்கே உள்ளது.தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
அரசியலைப்பில் பெரிய கேள்விகள் எழும்போது, சிக்கல்கள் எழும்போது, இது தொடர்பான வழக்குகளை அரசியலமைப்பு அமர்வுதான் விசாரிக்கின்றன. இந்த வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் எந்த நீதிபதி இருக்க வேண்டும் என்பதையும் தலைமை நீதிபதிதான் தீர்மானிக்கிறார். அதேபோல, வழக்குகளை விசாரிப்பதற்கான அரசியலமைப்பு அமர்வுகளை தன் பதவிக்காலம் முழுவதும் அமைக்காமலும் இருக்கலாம். இதற்கும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது.

இப்படிப்பட்ட முக்கியமான பதவிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு இரண்டாவது முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் வர உள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு, 75 ஆண்டு கால இந்திய வரலாற்றில் கேரள மாநிலத்தை சேர்ந்த கே. ஜி. பாலகிருஷ்ணன்தான் முதல் தலித் தலைமை நீதிபதி. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, இந்திய தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளார்.முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன்.

சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்த குடும்பம்:

இவரை தொடர்ந்து, தற்போது, இந்திய தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த இவர், கடந்த 1985ஆம் ஆண்டு, வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார்.

கடந்த 1987ஆம் ஆண்டு, வரை முன்னாள் அட்வகேட் ஜெனரலும் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியுமான ராஜா எஸ் போன்சலேவுடன் பணியாற்றினார். 1990 க்குப் பிறகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2000 ஆம் ஆண்டு, அரசு வழக்கறிஞரானார். பின்னர், 2003 ஆம் ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியானார்.16 ஆண்டுகளாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய அவர், கடந்த 2019ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாக தலைவராக உள்ள அவர், மணிப்பூர் கலவரத்தின்போது அனைத்தையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்தார்.

சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த வழக்கறிஞர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர் பி.ஆர். கவாய். இவரது தந்தை ஆர்.எஸ். கவாய், இந்திய குடியரசு கட்சியின் தலைவராக பதவி வகித்திருக்கிறார். கேரளா, பிகார், சிக்கிம் மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கிய அமர்வுகளில் இடம் பெற்றுள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்புக்கு ஒப்புதல் வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்விலும் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்த அமர்விலும் பி.ஆர். கவாய் இடம் பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க.!