chennireporters.com

சென்னை தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது இளம் வீராங்கனை பாலியல் புகார்.

தடகளப் பயிற்சியாளர் நாகராஜன்

சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் சென்னை நந்தனத்தை சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் (59) என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சென்னை பிராட்வே பச்சையப்பன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தட களப் பயிற்சி அளித்து வந்தார்.

எனக்கும் அவர் தடகள பயிற்சி அளித்தார்.என்னை போலவே அவரிடம் பெண்கள் சிலர் பயிற்சி பெற்று வந்தனர்.பல சமயங்களில் பயிற்சியை முடித்த பின் மற்ற பெண்களை அனுப்பி விட்டு பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாக கூறி என்னை மட்டும் தனியாக அந்த வளாகத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் செல்வார்.

அங்கு என்னை அமர வைத்தும் படுக்க வைத்தும் உடலின் பகுதிகளிலும் பயிற்சியாளர் நாகராஜன் பயிற்சி என்ற பெயரில் அத்துமீறுவார்.அதை அச்சத்துடன் நான் மறுத்தபோதும் தன்னுடன் ஒத்துழைத்தால் தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிப்பேன் என்று கூறி பாலியல் சீண்டலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.

என்னைப் போலவே சில வீராங்கனைகள் இடம் நாகராஜன் பாலியல் சீண்டல்கள் ஈடுபட்டிருந்தார்.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் பூக்களை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த சூழ்நிலையில் விசாரணைக்கு பயந்து தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மத்திய அரசின் ஜி.எஸ்.டி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவரிடம் பயிற்சி பெற்ற வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்த சூழலில்தான் வீராங்கனை ஒருவர் பயிற்சியாளர் நாகராஜன் மீது புகார் அளித்திருந்தார்.அதன்பேரில் விசாரணை நடத்தி வருகிறோம்.

பெண்கள் ஒத்துழைக்க வில்லை என்றால் பயிற்சியாளர் நாகராஜன் அவர்களுக்கு பயிற்சியை நிறுத்தி விடுவார்.பிரச்சினை செய்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவார் என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது தவிர தடகள போட்டிக்கான பயிற்சி மையங்களில் உன்னை பற்றி தவறாக சொல்லி விட்டு எந்த போட்டியிலும் கலந்து கொள்ள விடமாட்டேன் என்று நாகராஜன் கூறுவதால் மன உளைச்சலுடன் பாலியல் சீண்டல்களை வீராங்கனைகள் சகித்து வந்திருக்கின்றனர்.

பயிற்சியாளர் நாகராஜனின் பாலியல் சீண்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வீராங்கனை ஒருவரை அவரின் பெற்றோர் சென்னையில் இருந்து வேறு மாவட்டத்திற்கு பயிற்சிக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அவரை எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள விடாமல் நாகராஜனை இடையூறு செய்து இருக்கிறார் பாதிக்கப்பட்ட வீராங்கனை கொடுத்த புகாரின் பேரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் மற்றும் போஸ்கோ சட்டத்தின் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம் .

விசாரணைக்கு பயந்து நாகராஜன் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.எனவே மேற்கண்ட பயிற்சியாளர் நாகராஜனால் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் இந்த செல் நம்பரில் 9444772222 நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றனர்.

இதையும் படிங்க.!