chennireporters.com

பாலியல் புகாரில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போஸ்கோ சட்டத்தில் கைது.

ஒய்.ஜி. மகேந்திரன்

சென்னை கே.கே நகரில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி பால பவன் பி.எஸ்.பி.பி.
பள்ளி இயங்கி வருகிறது.கல்வியாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதியால் 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த கல்வி நிறுவனம்.சென்னையில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் இந்த பள்ளி இயங்கி வருகிறது.

சென்னை கே.கே நகர் பிஎஸ்பிபி ஸ்கூல் முன்னாள் மாணவர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேச்சில் தனக்கு வந்த புகார்களை பகிர்ந்தது அடுத்து சாட்டப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்து வருகிறது.

ஆசிரியர் ராஜகோபால்

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே நகர் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீது தான் புகார்கூறப்பட்டுள்ளது.அந்த பள்ளியின் முன்னாள் மாணவிக் ரூபாளியின் இன்ஸ்டாகிராமுக்கு அந்த ஆசிரியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ஷேர் செய்திருக்கிறார்.

நீங்கள் நான் படிக்கும் பள்ளி யின் முன்னாள் மாணவி தானே நானும் உங்களை மாதிரி காமர்ஸ் படிக்கும் மாணவி தான்.உங்ககிட்ட ஒரு கம்ப்ளைன்ட் பத்தி பேசணும்.

எங்களுடைய காமர்ஸ் டீச்சர் ராஜகோபாலன் கிளாசில் ஏகப்பட்ட மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார்.

இது ஒரு கட்டத்தில் எல்லை மீறி போனது.எனது தோழி ஒருத்தியை சினிமாவுக்கு அழைக்கும் அளவிற்கு போய் விட்டது.கிளாஸ் எடுக்க உருவாக்கிய குழுக்களில் மாணவிகளுக்கு ஆபாச பட லிங்குகளை அனுப்புகிறார்.

இதுகுறித்து எங்கள் எச்.ஓ.டி ஓடிக்கிட்டே புகார் அளித்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை.ஆக்ஷனில் இறங்க தயாராகி விட்டோம் இதுபோல நீங்கள் படித்த சமயத்திலும் இப்படி நடந்து கொண்டதாக புகார் எதுவும் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

எங்களது சீனியர் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் மாணவர் இன்ஸ்டாகிராமில் இதை ஷேர் செய்த நிலையில் அந்த வாத்தியார் மேல் ஏகப்பட்ட புகார்கள் குவிந்த வண்ணம் வருகிறது.

இதுபோக ஆன் லைன் வகுப்பில் ராஜகோபால் அரை நிர்வாணமாக இடுப்பில் துண்டு கட்டி கொண்டு வகுப்புக்கு வருவது மாணவர்களை நள்ளிரவில் வீடியோ கால் செய்து அழைப்பது போன்ற அதிர்ச்சி அளிக்கக்கூடிய புகார்களும் ராஜகோபால் மீது குவிய தொடங்கி உள்ளது.

20 வருடமாக அந்த ஸ்கூலில் காமர்ஸ் வாத்தியாராக இருக்கும் இவர் அதே ஸ்கூலில் பாலியல் குற்றங்கள் தொடர்பான விஷியங்களை ஆலோசிக்கும் பிரிவிலும் உறுப்பினராக இருக்கிறார்.

என்பதுதான் ஹை லைட் .ஒய்.ஜி மகேந்திரன் மதுவந்தி நிர்வகிக்கும் பள்ளி இது என்று செய்தி பரவும் சூழலில் நானும் எனது மகள் மது வந்தியோ அந்த பள்ளியில் ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எனது தாயின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது.

என்று ஒய்.ஜி மகேந்திரன் ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார்.மேலும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் தொல்லை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுதவிர ராஜகோபால் பள்ளி மாணவிகளுக்கு இரட்டை அர்த்தத்துடன் குறுஞ்செய்தி அனுப்புவது இரட்டை அர்த்தத்துடன் பேசுவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்த போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய செல்போன், லேப்டாப், பெண் ட்ரைவ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க.!