chennireporters.com

பெட்ரோல் விலை உயர்வு நாய் மீது சவாரி செய்யும் மனிதர்.

சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் காரணத்தினால் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் பொதுமக்கள் கேஸ் விலை உயர்வு அதிகரித்து வருகிறது.

இந்த உயர்வு சாதாரண அடித்தட்டு மக்கள் மக்களை பெரிதும் பாதிப்படைய வைத்துள்ளது.

மத்திய அரசின் வரியும் மாநில அரசின் வரியும் உயர்ந்துகொண்டே வருவதினால் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதில் பெரிதும் சிரமம் ஏற்படுத்தி வருகிறது.

அதனை தொடர்ந்து மின்சார மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் பைக் கார்களும் பல கம்பெனிகள் தங்களுடைய வாகனங்களை இறக்குமதி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் சைக்கிள் உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகிறது. அந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வை சித்தரிக்கும் வகையில் தனது கால்களில் ஸ்கேட்டிங் ஷூவை அணிந்து கொண்டு நாய் மீது சவாரி செய்யும் இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதையும் படிங்க.!