சிலைக்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்சா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றம் காதர் பாட்சா மனுவை அனுமதித்து உயர்நீதிமன்ற தடையை நீக்கியது.

விசாரணை தொடர்ந்தாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் தரப்பு வக்கீல் கோரிக்கை வைத்ததை நிராகரித்தது.
உங்கள் மீது தவறு இல்லை என்றால், ஏன் குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோருகிறீர்கள்? திருடப்பட்ட சிலைகளை எங்கே வைத்துள்ளார்.
ஏன் பொன் மாணிக்கவேல் மீது ஊழல் தடுப்பு பிரிவு சட்டம் வழக்கில் சேர்க்கவில்லை என நீதிபதிகள் சராமாரி கேள்விகள் எழுப்பினர்.
மனுதாரர் காதர் பாட்சா தரப்பில் வழக்கறிஞர் இன்பான்ட் தினேஷ் ஆஜரானார்.

உச்ச நீதிமன்றம்.
இது தொடர்பான மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, விரைவாக விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிபிஐ தரப்பில் பொன் மாணிக்க வேல் மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பொன் மாணிக்க வேலை காவலில் எடுக்க சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது நடந்த விசாரணையின்போது, பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்க வேல் பொறுப்பேற்பதற்கு முன்பு பதிவான வழக்குகள் மற்றும் அதன் பிறகு பதிவான வழக்குகள் குறித்து அறிக்கை கேட்கப்பட்டது.
இந்த நிலையில் பொன் மாணிக்க வேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை கோரிய உத்தரவுக்கு எதிராக முன்னாள் டி.எஸ்.பி. காதர்பாஷா சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். அப்போது நீதிபதி, “உங்கள் மீது தவறு இல்லை என்றால் குற்றப்பத்திரிக்கையை ஏன் தடை செய்ய வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.
மேலும் தன் மீதான வழக்கை மெரிட் முறையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து பொன் மாணிக்கவேல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் பொன்மாணிக்கவேல் மீது மீண்டும் சிபிஐ பார்வை விழும் என கூறப்படுகிறது. அதே சமயம் பொன் மாணிக்க வேல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு தனது தரப்பு வாதத்தை முன்வைக்கலாம் என தெரிகிறது.
